Author: yourkattankudy.com
-
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் பட்டம் பெற்ற பலாஹிய்யீன்களின் வருடாந்த ஒன்றுகூடல் – 2015
காத்தான்குடி: காத்தான்குடியில் சன்மார்க்கக் கல்விக்காகாக 1955ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் பழைமை வாய்ந்த அறபு மத்ரசக்களின் வரிசையில் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஹாபிழ்கள், மௌலவிகள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். இதில் வெளியேறிச் சென்ற பழைய மாணவர்களின் அமைப்பே ‘ மஜ்லிஸூல் பலாஹிய்யீன்’ ஆகும்.
-
உலமாக்களும் தஃவா அமைப்புக்களும் தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: உலமாக்களும் தஃவா அமைப்புக்களும் தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
“அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது”:மருதமுனையில் றிசாத்
மருதமுனை: அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம் இறங்கி இருப்பதாக அ.இ.மு.கா.தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார்.
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் SLMC – NFGG ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் தேர்தல் கூட்டு ஒன்றினை ஏற்படுத்தி செயற்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.
-
புலனாய்வுப் பிரிவின் தேர்தல் அறிக்கை: ஐ.தே.க. வெற்றி!
கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அரச புலனாய்வு சேவை நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையில் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணி 10 மாவட்டங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 9 மாவட்டங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரித்தானியாவில் ஞாயிறன்றும் மழை நீடிக்கும்
லண்டன்: இங்கிலாந்தில் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மீண்டும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, வெள்ளிக்கிழமையன்று பெய்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருந்தபோதும் சனிக்கிழமையன்று நல்ல வெயில் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரதேச வாதத்தினை உடைத்தெரியும்”: முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் (காணொளி)
அஹமட் இர்ஸாட்:- மாகாணத்திலும் அகில இலங்கை ரீதியிலும் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்து கல்வித்துரையில் பிரபல்யமன நீங்கள் அரசியலுக்குள் புதுமுகமாக நுளைந்துள்ளது சம்பந்தமாக உங்களுடைய பிரதேச மக்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எங்களுடைய பத்திரிகையின் ஊடாக உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தினை தர முடியுமா?
-
இன்று மாலை நேத்ரா தொலைக்காட்சியில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா – ந.தே.மு. அரசியற் கூட்டணியில் 2ம் இலக்கத்தில் வேட்பாளராகப் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், இன்று 25.07.2015 சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார்.
-
“கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணி”
சம்மாந்துறை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு சாவு மணி அடித்து கிழக்கில் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கும் அடித்தளத்தினை எமது தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உருவாக்கியுள்ளது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பளாருமான எம்.ஜமீல் தெரிவித்தார்.
-
NFGGயின் 2வது மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
– NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் நேற்று காத்தான்குடி தேசிய பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.
-
தலைவர் அஷ்ரபினதும் மைத்திரியினதும் படங்களைக்காட்டி வாக்குக்கேட்கும் நிலைக்கு ஹிஸ்புல்லாஹ் தள்ளப்பட்டுள்ளார் – பொறியியலாளர் அப்துர் றஹ்மான்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வருட கால அரசியல் ஜாம்பவானாக இருந்து வருகின்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு, அவர் ஆதரவு வழங்கிய இரண்டு நபர்களின் புகைப்படங்களைக்கூட அவரது பிரசுரத்தில் இடம்பெறச் செய்ய முடியாத அளவுக்கு அவர் அரசியல் வங்குரோத்து அடைந்திருப்பது எமக்கும் கவலையளிப்பதாகவே உள்ளது. கடந்த காலங்களில் அவர் பகிரங்கமாக எதிர்த்த தலைவர்களான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும்
-
அந்தநாள் ஞாபகம்-9: அரசியல் தந்திரமும், தேர்தல் அலுவலக எரிப்பும்!
– MJ காத்தான்குடி: 1989ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற காலம். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதயத்தின் பின்னர் இக்கட்சி சந்திக்கும் முதலாவது பாராளுமன்றத் தேர்தல். இப்போதுள்ளது போல்தான் அன்றும் தேர்தல் ‘முசுப்பாத்திகள்’ களைகட்டியிருந்த காலம்.