இன்று மாலை நேத்ரா தொலைக்காட்சியில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்

rahumanகாத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு.கா – ந.தே.மு. அரசியற் கூட்டணியில் 2ம் இலக்கத்தில்
வேட்பாளராகப் போட்டியிடுபவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், இன்று 25.07.2015 சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ள ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார்.

இந்நிகழ்வின்போது, தமது முன்னணியின் தேசப்பற்றுமிக்க நல்லாட்சி அரசியற்
கோட்பாடுகள் பற்றியும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமையில் ஒன்றிணைந்து ஸ்ரீ.ல.மு.காவுடன் கூட்டணி அமைத்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்தும் அவர் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

– புவி எம் ஐ ரஹமதுழ்ழாஹ்

Published by

Leave a comment