Author: yourkattankudy.com
-
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நிதிமோசடி பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத் கடந்த மஹிந்த ராஜபக்ச கொடுங்கோள் ஆட்சியில் நடந்த நிதி மோசடிகளை விசாரிக்க விசேடமாக நிதி மோசடி பிரிவு FCID ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதி ஒரு வருடம் பூர்த்தி அடையவுள்ளது. இந்த நிலையில் நாட்டில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக பல அமைச்சர்கள்,பலநிறுவனங்கள், மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பம் உட்பட பலர் விசாரணைக்கும்,வாக்குமூலமும் பெறப்படுகிரது. அன்மையில் யோசித்த ராஜபக்ச FCIDயினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
ஞானசார பிணையில் விடுதலை
ஹோமாகம: பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று (09) பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ரூபா 2 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதாக ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க அறிவித்தார்.
-
சரத் பொன்சேகா மீண்டும் நாடாளுமன்றத்தில்
கொழும்பு: முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 4 ஆண்டுகளின் பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆளும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த அமைச்சர் எம்.கே.டி. எஸ். குணவர்தனவின் மறைவு காரணமாக ஏற்பட்டிருந்த பதவி வெற்றிடத்திற்கே சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மீள்குடியேற்றம் துரித கதியில்; ஒருவாரத்தில் இறுதி அறிக்கை
கொழும்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகும், இதற்காக வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் விவரம், அகதிமுகாம்களின் எண்ணிக்கை தொடர்பில மிகத் தெளிவான இறுதி அறிக்கை அடுத்த வாரம் சமர்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
மஞ்சந்தொடுவாய் ஹிழ்றியா பாலர் பாடசாலைக்கு NFGG யினால் இலவச சீருடைகள் விநியோகம்
NFGG ஊடகப் பிரிவு மஞ்சந்தொடுவாய்: மஞ்சந்தொடுவாய் ஹிழ்றியா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் வழங்கி வைக்கப்பட்டன. கடந்த 07.02.2016 அன்று மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் இந்த சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையில் கல்விபயிலும் 35 மாணவர்கள் இந்த சீருடைகளைப் பெற்றுக் கொண்டனர்.
-
“முஸ்லிம் பாடசாலைகளின் எதிர்காலம் பற்றி சமூகம் தீவிரமாக ஆராய வேண்டும்’- ஏ.எச்.எம். அஸ்வர்
சாய்ந்தமருது- எம்.எஸ்.எம்.சாஹிர் கொழும்பு: நாட்டில் எதிர்காலத்தில் மும் மொழிப்பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறானால் முஸ்லிம் பாடசாலைகளின் நிலை என்ன என்பது பற்றி சமூகம் தீவிரமாக ஆராய வேண்டும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார ராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரதித் தலைவருமான ஏ.எச்.எம்.அஸ்வர் கூறினார்.
-
சுனாமியில் காணாமல்போன குழந்தைக்கு உரிமை கோரும் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள்
கல்முனை: சுனாமியின்போது காணாமல் போன குழந்தை ஒன்றின் உரிமையை இப்போது இரு குடும்பங்கள் கோருகின்றன. கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிய வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமியை சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோருகின்றன.
-
காத்தான்குடி மீடியா போரத்தின் 16ஆவது வருடாந்த மாநாடு
காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 16ஆவது வருடாந்த மாநாடு அண்மையில் காத்தான்குடி கடற்கரை ஜுமைறா பெலஸ்ஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பித்தார்.
-
பிழையில்லாத பிழைகள்
அவுலியா சியாரத்தில் அறிவித்தல் ஒன்று ‘இங்கு என்னை(ண்ணை) விற்கப்படும்’ வழக்கு மண்டபத்தின் வாசலில் பெயர். காதிக் ‘கேடு’ அரச அலுவலகத்தில் அழகான வரவேற்பு ‘அன்புடன் ‘அலை’க்கிறோம்’
-
“தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த காலம் ஒழிக்கப்பட்டுள்ளது”-சிப்லி பாரூக்
காங்கேயனோடை: இரண்டு சமூகங்களையும் பிளவுபடுத்தி வேடிக்கை பார்த்த பயங்கரவாத சூழல் மாறி இன்று நல்லதோர் புரிந்துணர்வினூடாக இரு சமூகங்களும் ஒன்றினைந்து புதியதோர் கலாச்சாரத்தினை தோற்று வித்திருக்கின்றார்கள் என்று அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்திய கல்வி வலையத்திற்குட்பட்ட ஆரையம்பதி, காங்கேயனோடை மட்/மம/ அல்-அக்ஷா மகா வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி மற்றும் பிரிண்டர் இயந்திரங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
-
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு திறந்த மடல்
ஏறாவூர்: நான் அரசியல் வாதியாக உயர்ந்தவர்களை விட ,கல்வி ரீதியாக உயர்ந்தவர்களை மிகவும் மதிப்பவன். சிறிய வயதிலேயே தந்தையை இழந்த நான் ,எனது தாயின் அயராத உழைப்பால் ஆளாகிக் கொண்டிருப்பவன். க.பொ.த உயர்தர கணிதப்பிரிவில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் கல்விகற்று பொறியியல் துறைக்கு தெரிவாகி பல்கலைக் கழகமொன்றில் மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருப்பவன்.
-
பெண் விருத்தசேதனமும், இஸ்லாமும்
முஅல்லிம் பெண் விருத்தசேதனம் தொடர்பான விடயமானது முஸ்லிம் பிரதேசங்களில் மிகக் கணிசமான அளவு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகங்கள் பெரியளவில் வாழும் ஐரோப்பிய நாடுகளில் மேற்படி செயன்முறை தோற்றுவித்துள்ள பாதிப்பான எதிர்விளைவுகளும், கண்டனங்களுமே இத்தகைய நிலைமைக்கு பிரதான காரணங்களாகும். குறிப்பாக ஆபிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி இந்த விருத்தசேதனம் செய்யப்படும் விதத்தினையும், அது இஸ்லாமிய சட்டத்தில்