Author: yourkattankudy.com
-
“ஹிஸ்புள்ளாஹ் கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்”
காத்தான்குடி: நிதி மோசடி விசாரணை பிரிவினை கலைக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் கூறுவதை நான் வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி பிரதேச இணைப்பாளர் VTM. முபாறக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
காத்தான்குடி அல்லாஹ் சதுக்கத்திற்கு அருகாமையில் உள்ள வடிகான்களுக்கு வடிகான் மூடிகள் இடப்பட்டது
M.T. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி அல்லாஹ் சதுக்கத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருகின்ற ஆழமான வடிகான்கள் நீண்டகாலமாக மூடிகள் இடப்படாமல் காணப்பட்டது. இதனால் அவ்வீதியால் பயணிப்பவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதுடன் பல்வேறு வீதி விபத்துக்களையும் மக்கள் எதிர் நோக்கி இருந்தனர். எனவே அதனை சீர் செய்யும்படி அதற்குரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுத்திருந்தார்.
-
“காவல் நாய்களைக் கண்டு பயப்படுபவர்கள் கள்வர்களாகவே இருக்க முடியும்..”
காத்தான்குடி: ஊழல் மோசடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் விசேட கட்டமைப்புக்களை கண்டு சிலர் இப்போது பயப்படத் தொடங்கியிருக்கிறார்கள். வீடொன்றில் இருக்கும் பெறுமதியான பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு வளர்க்கப்படும் காவல் நாய்களைக் கண்டு பயப்படுபவர்கள் கள்வர்களாகவே இருக்க முடியும்.’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
உயிர்வாழ உதவுவோம்
MPCS.வீதி, செம்மண்னோடை, வாழைச்சேனை என்னும் முகவாியில் வசித்துவரும் ஜனாப். AH. லாபீா் (Van Driver) என்பவா் தனது இரண்டு கிட்னியும் முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்காக போராடி வருகிறாா்.
-
குடும்பத்துக்காக கல் தூக்கும் சிரிய அகதிச் சிறார்கள்
அலெப்போ: சிரியாவின் பெரிய நகரான அலெப்போவில் நடக்கும் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள், துருக்கி எல்லையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சுமார் எழுபதினாயிரம் பேர் துருக்கிய எல்லையை நோக்கி செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல பலர் லெபனானுக்கும் சென்றிருக்கிறார்கள்.
-
NFGG யின் இலவச சீருடை விநியோகம்
NFGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: காத்தான்குடி அப்ரார் பிரதேசத்தில் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் இயங்கிவரும் அல்உமர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் (05.02.2016) வழங்கி வைக்கப்பட்டன. இன்று பி.ப 04.30 மணிக்கு அல்உமர் பாடசாலை வளாகத்தில் வைத்து NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களால் இந்த சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
-
தாருல் அதரின் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு காத்தான்குடியில்-பெரும் திரளான மக்கள் பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் அத்வைத மற்றும் ஷியாக்கள் விழிப்புணர்வு இஸ்லாமிய மாநாடு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் (குட்வின் சந்தியில்) இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் பொலிஸ் மற்றும் பிஸ்மி குழுமத்தின் சுதந்திர தின நிகழ்வுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 68வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு இடங்களில் சுந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கமைவாயக காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த 68வது சுதந்திர தின நிகழ்வு நேற்று 4 வியாழக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
-
சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் சிரமதான நிகழ்வுகள்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை திருநாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிரமதான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன. இதற்கமைவாக மட்டக்களப்பு சிறைச்சாலை ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு சிறைச்சாலை அத்தியட்கசகர் யூ.எச்.எம்.அக்பர் தலைமையில் நேற்று 4 வியாழக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகாமையிலுள்ள வீதிகளில் நடைபெற்றது.
-
சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாvமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் இலங்கையின் 68வது சுதந்திர தினத்தன்று 4.2.2016 நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகாமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வு
நமது நிருபர் காத்தான்குடி: இலங்கை சனநாயகசோஷலிசகுடியரசின் 68வது சுதந்திரதினநிகழ்வு 04.02.2016 வியாழக்கிழமை காலை 08:00 மணிக்குவைத்தியஅத்தியட்சகர் Dr.MSM. ஜாபிர் அவர்களின் வைத்தியசாலை முன்றலில் இடம்பெற்றது. காலை 08:00 மணிக்குதேசியகொடிஏற்றிவைக்கப்ட்டுசிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் தேசியகீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் Dr.MSM. ஜாபிர் அவர்களினால் வரவேற்புரையும் தலைமையுரையும் நிகழ்த்ததேசியசுதந்திரதினவிஷேட சொற்பொழிவினை வைத்தியசாலைஅபிவிருத்திக் குழு உறுப்பினரும் மட்டக்களப்பு மத்திகல்விவலயஆசிரியஆலோசகருமானமௌலவிஅல்ஹாஜ் MI.அப்துல் கபூர் (மதனி) நிகழ்த்தினார்.
-
கிழக்கில் 68வது சுதந்திர நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மும்முரம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எதிர்வரும் 04-02-2016 திகதி இலங்கையில் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கை திருநாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.