Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வெள்ளை பிரம்பு தாங்கி வருபவர்கள் முழுமையாக பார்வை அற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள் எனும் பல்வேறு சுலோகங்கள் தாங்கி இன்று மட்டக்களப்பில் வெள்ளைப் பிரம்பு தின ஊர்வலம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வெள்ளைப் பிரம்பு தின ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்முனை கல்லடி பிரதான வீதியில் இடம்பெற்றது.

  • வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்

    கொழும்பு: வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்- தனக்கு வழங்கப்பட்ட 13  முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

  • ஹஜ்ஜின் போது மௌத்தாகி விட்டதாகக் கூறப்பட்ட ஹாஜி உயிருடன் திரும்பினார்!

    – SHM மக்கா: இறந்து விட்டதாகக் கருதப்பட்ட சென்னை ஹஜ் பயணி உயிருடன் மீண்டதால் அவரது குடும்பத்தினர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். சென்னையைச் சேர்ந்த பரக்கத்துல்லா (74), தனது மனைவி பத்ருன்னிஷாவுடன் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்றார். ஹஜ்ஜின் முதல் நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் கூட்டத்தில் பரக்கத்துல்லா காணாமல் போய்விட்டார்.

  • உ.பி யில்1000 டொன் தங்கப் புதையல் தோண்டும் பணிகள் ஆரம்பம்!

    – SHM உன்னாவ்: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே 1000 டொன் தங்கப் புதையலைத் தேடுவதற்காக அகழாய்வுப் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே மன்னர் ராம்பக்சிங்கின் கோட்டை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது.

  • 2012: பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி நவம்பரில்

    கொழும்பு: 2012 ம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள் நவம்பர் முதல் வாரத்தில் வெளிவருமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவி பேராசிரியை ஷானிக்கா ஹிரிப்புரேகம  தெரிவித்தார்.

  • ‘இலங்கையில் விளிம்பு நிலைக்கு தள்ளப்படும் தமிழ், முஸ்லிம் பெண்கள்’

    லண்டன்: இலங்கை போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினப் பெண்கள் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், மோசமான பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்கிறார்கள் என்று மனித உரிமைகள் அமைப்பான எம் ஆர் ஜி இண்டர் நேஷனல் எனப்படும், சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

  • அதிவேகப் பாதையை பொது மக்கள் பார்வையிட அனுமதி

    கொழும்பு: இம்மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ள கட்டுநாயக்க – கொழும்பு அதிவேகப் பாதையைப் பார்வையிட பொது மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதி உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் நிர்மணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேகப் பாதையை பொதுமக்கள் இம்மாதம் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஷேவாக்கின் 2 சாதனைகளை ஒரே நாளில் முறியடித்த கோஹ்லி

    – SHM ஜெய்பூர்: நேற்று ஜெய்பூரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் விராத் கோஹ்லி வீரேந்தர் ஷேவாக்கின் இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

  • மலாலாவுக்கு கௌரவ குடியுரிமை வழங்க கனடா முடிவு: இங்கிலாந்து எலிசபெத் ராணியும் சந்திக்க அழைப்பு!

    – MJ லண்டன்: தனது கொள்கைக்கு எதிரானவர்களை போட்டுத் தள்ளும் தலிபான் இயக்கத்தால் கடந்த வருடம் போட்டுத்தள்ள முற்பட்டு, பின்னர் படு காயங்களுடன் தப்பி, சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்திருக்கும்  மலாலா இன்று உலகில் பேசப்பட்டு வரும் ஒருவர்.

  • பிரயாணிகளுக்கு சரியான நேரத்தை காட்டத்தவரும் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையக் கடிகாரம் எந்த நேரத்திலும் 7.20 மணி நேரம் என்று காட்சியளிக்கின்றது

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரம் நிறுத்தி வைக்கப்படும் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கடிகாரம் பிராயாணிகளுக்கு எந்த நேரத்திலும் 7.20 மணி நேரம் என்று பிழையாக நேரம் காட்டுவதாக பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

  • மட்டு மாவட்டத்தில் செலான் வங்கியின் பாடசாலை மாணவர் சேமிப்புப் பிரிவுகள் இரு பாடசாலைகளில் திறந்து வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பாடசாலை மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் செலான் வங்கியினால் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் நடாளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் மாணவர் சேமிப்புப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

  • ‘ஆசாரா சாமியின் சல்லாபங்கள்’!

    – SHM அகமதாபாத்: சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் மீது புதுப் புதுப் புகார்களாக் கிளம்பி வருகின்றன. அவரது பெண் பலவீனம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.ஆசாராமுக்கு தினசரி பெண்கள் வேண்டும். அதுவும் புதுப் புதுப் பெண்ணாக இருக்க வேண்டுமாம். அவரால் பெண் துணை இல்லாமல் இருக்க முடியாதாம்.

←Previous Page
1 … 910 911 912 913 914 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar