டெல்லி: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான உறவுகளை தாம் எதிர்பார்ப்பதாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில், நரேந்திரமோடியுடன் தான் நேற்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தது குறித்தும் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நரேந்திர மோடி ட்விட்டரில் பதிலளிக்கையில், உங்களுடன் பேசியது அருமையாக இருந்தது. நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான உறவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by


Leave a comment