Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • புதிய மாணவர்களை மக்தப் பிரிவில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்

    காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் நாடளாவியரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் மக்தப் புணரமைப்புத்திட்டத்தின் அடிப்படையில் எமது புதிய காத்தான்குடி பத்ரியா ஜும்மாப் பள்ளிவாயலில் இயங்கி வருகின்ற எமது பத்ரியா மக்தப் பிரிவில் EXPRESS CLASS  மற்றும் NORMAL CLASS  களுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது: சமூகத்திற்காக பேசுகின்ற பொழுது நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றோம் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் தூண்டப்பட்டு ஓரு தமிழ் சமூகம் பட்ட துன்பம் துயரம் எமக்கு தெரியும். இந்த தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை செய்து செய்து தமிழ் மக்களை அதன் மூலம் காயப்படுத்தியுள்ளதை நேரடியாக கண்டிருக்கின்றோம். ஆகையால் நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்ய முடியாது. நாங்கள் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

  • ‘பவுன்சர்’ உருவான கதை

    டெல்லி: புயல் வேகத்தில் வீசப்படும் ‘பவுன்சர்’ துடுப்பாட்டவீரர்களின் தலை, கழுத்து பகுதியை நோக்கி சீறி வரும். சில நேரம் துடுப்பாட்ட வீரர்களை விட மிக உயரமாக எழும்பும். பவுன்சர்களை பொறுத்த வரை அதை அடிக்காமல் விடுவது சிறந்தது. ஏனெனில் சரியாக கணிக்காமல் ஆடினால் காயம் ஏற் படுவதை தவிர்க்க முடி யாது.

  • பாலமுனை பிரதேசத்தில் வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: ஸ்ரீ லங்கா ஹிறா பௌன்டேஷன் நிறுவனத்தின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசதி குறைந்த குடும்பங்கள் மற்றும் பள்ளிவாயல்கள் ஆகியவற்றிற்கு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இலவச இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

  • யாழ்- பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் ஒன்றியமும் பரீட் பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்த வழிகாட்டல் கருத்தரங்கு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: யாழ்பாண பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் ஒன்றியமும் காத்தான்குடி பரீட் பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு 29-11-2014 இன்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலத்தில் இடம்பெற்றது.

  • “முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படவேண்டும்”: வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின்

    – PMGG யாழ்ப்பாணம்: ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள் எவ்வாறானதாக இருக்கவேண்டும் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இத்தகைய தீர்க்கமான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் அரசியல் தீர்மானங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் குறிப்பிட்டார்.

  • அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

    – பர்ஸாத் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர், கல்முனை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி AJ. அலக்ஸ் ராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

  • வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அச்சுறுத்தப்பட்டார்!

    – PMGG யாழ்ப்பாணம்: யாழ். மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலைகள் தொடர்பாக யாழ் ஒஸ்மானியா கல்லூரி, யாழ். கதீஜா கல்லூரி மீளத்திறப்பு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ.தி.குருகுலராஜா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

  • தாய்லாந்தில் இடம் பெற்றஆசிய பசுவிக் பிராந்திய மாநாட்டில் சல்மா ஹம்சா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

    பேங்கொக்: பெண்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக எவ்வாறு முன்னேற்றலாம் என்றும் அதற்கான பிரச்சினைகள் தீர்வுகள் போன்றவைகள் பற்றியும் தனது கடந்த கால அனுபவங்கள் மூலம் சவால்களை எவ்வாறு எதிர்நோக்கலாம் என சிறப்பான தொரு உரையை நிகழ்த்தியமைக்காக  தாய்லாந்தில் அமெரிக்க தூதரகத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

  • புதுக்குடியிருப்பில் புதைகுழி தோண்டும் பணி டிசம்பர் 2ம் திகதி

    கொழும்பு: பொலிஸ் பரிசோதகர் துரைரட்ணம் ஜெயரட்ணம் அடங்கலான 80 பேர் புலிகளால் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி விசாரணை முன்னெடுக்கப்படவிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

  • நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், 200 பேர் பலி!

    கானோ: நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியுள்ளனர்.அங்குள்ள மத்தியப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் மூன்று குண்டு வெடிப்புகளும் இடம்பெற்றன என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

  • காத்தான்குடி – குர்ஆன் சதுக்க சுற்றுவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கேட்டறிந்து கொண்டார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீதியை அழுபடுத்தும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாலஹ்வின்  முயற்சியின் பயனாக மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து சற்று அருகாமையில் அமைந்துள்ள குர்ஆன் சதுக்கத்தில் பாரிய அளவில் மிகவும் எழில்மிக்க சுற்றுவட்டம் (ரவுண்ட போட்) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 609 610 611 612 613 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar