அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

zaheer akp– பர்ஸாத்

அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர், கல்முனை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி AJ. அலக்ஸ் ராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை பழைய மாணவரும்,  இலங்கை
திறந்த பல்கலைக்கழக சட்ட பீட மாணவரும், விஸ்டம் இளைஞர் கழகத்தின் தலைவரும் ஆவார்.

தற்போது அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூட தாதி உத்தியோகத்தராக கடமையாற்றும் இவர் அல்ஹாஜ் எஸ்.எல். சரிபுதீன், ஈ .எல். சல்மா தம்பதியினரின் மூன்றாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

zaheer akp
சரிபுதீன் ஷஹீர்

Published by

Leave a comment