-
“இந்திய நடிகர்களை கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தாலும் மக்கள் என்பக்கமே”
கொழும்பு:”இந்திய நடிகர்களை கொண்டு தேர்தல் பிரசாரம் செய்தாலும் மக்கள் என்பக்கமே” உள்ளார்கள் என ஜனாதிபதி தேர்தல் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடக்கின்ற தேர்தல் பிரசாரங்களில் வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச தற்போது இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.
-
சூதாட்ட அரசியலில் இருந்து போராட்ட அரசியலை பிரித்தறியும் தருணமிது..!
– இனாமுல்லாஹ் கொழும்பு: நல்லவர்களை தீயவர்களிடமிருந்து, நயவஞ்சகர்களிடமிருந்து பிரித்தரிவதற்காக காலத்துக்குக் காலம் சமூகங்கள் சோதிக்கப்படுகின்றன. அது பிரபஞ்சத்திற்காக இறைவன் வகுத்த நியதி. முஸ்லிம் சமூகம் கடந்த பல தசாபதங்களாக பலவேறு சோதனைகளை தாண்டி வந்துள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொள்கை வழி நின்றவர்கள் அனாதவராய் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
-
‘எங்கள் ஆதரவு தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே’ ஹிஸ்புல்லாவின் செவ்வி ஒலிவடிவம்
– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்
-
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிய அரசுக்கு ஆப்பு — சுபைர்
– அபூ பயாஸ் ஏறாவூர்: முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை கருத்தில்கொண்டும், நாட்டில் நல்லிணக்க ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கம் கொண்டும் எமது தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு முழு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
-
அப்ரிடி ஓய்வு
லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறைவீரர் ஷகித் அப்ரிடி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது ‘நல்ல நிலைமையில் இருக்கும்போதே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.
-
14 மாவட்டங்களில் வெள்ளம்: சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்பு!
மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிப்பு!! கொழும்பு: நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 14 மாவட்டங்களிலும் 12,855 குடும்பங்களைச் சேர்ந்த 46,746 பேர் 205 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தபால் மூல வாக்களிப்பு இன்று
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ அஞ்சல்மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும் (23) நாளையும் (24) நடத்தப்படவுள்ளது. அஞ்சல்மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் அரசாங்க அலுவலகத்தில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிக்குள்ளாக தமது அஞ்சல் வாக்கினை செலுத்த முடியும்.
-
“றிசாட், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு முட்டாள்தனமானது”
காத்தான்குடி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையான முடிவாகுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அ. இ. ம. கா. இன் தேசிய அமைப்பாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எடுத்த முடிவையடுத்து காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
-
“ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும்”: மகிந்த
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து வெளியாகும் “ஃபைனான்ஸியல் டைம்ஸ்” நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
-
காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளத்தில் முழ்கியுள்ள வீடுகளும், வீதிகளும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக இப் பிரதேசத்தின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதுடன் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜனாதிபதி தேர்தலில் எங்கள் ஆதரவு தொடர்ந்தும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் உட்பட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோரும் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்குவதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.