-
தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நாட்டில் இனியொருபோதும் ஏற்படாது : சந்திரிகா
கொழும்பு: தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய சூழல் நாட்டில் இனியொருபோதும் ஏற்படாது. சிறுபான்மை மக்களை பாதுகாத்து பெற்றுக்கொண்ட வெற்றியினை தக்க வைத்துக்கொள்வோம் என தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சட்டரீதியாக பெற்றுக்கொண்ட ஜனநாயகத்தை உண்மையானதாக்கிக் கொள்ள மேலும் முயற்சிகள் தேவையெனவும் குறிப்பிட்டார்.
-
நிறுத்தப்பட்ட ஓமந்தை சோதனை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின
வவுனியா: இலங்கையின் வடக்கே, கடந்த திங்கட்கிழமை 2 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள், புதன்கிழமை இரவு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
‘கே.பி.’ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை
கொழும்பு: விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடுசெல்வதை தடைசெய்யும் உத்தரவொன்றை இலங்கையின் மேன்முறையிட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.
-
அல்-மனார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருட பூர்த்தி
அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினையும், அல்-மனார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருட பூர்த்தியையும் முன்னிட்டு அல் மனார் நிறுவனம் நேற்று (04.02.2015) புதன் கிழமை முழுநாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது.
-
கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தில் உள்ள கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியொன்று நேற்று மன்னார் தள்ளாடி இரானுவ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
-
ஸாக்கிர் நாயக்கிற்கு ‘மன்னர் பைஸல்’ விருது
– பஹத் ஜூனைட் றியாத்: சவுதி அரேபிய அரசு ‘மன்னர் ஃபைஸல்’ விருதுக்கு ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 1. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹ்மான் -இஸ்லாமிய படிப்புக்காக 2. ஜெஃப்ரி ஐவன் கார்ட (வாஷிங்டன்) -மருத்துவ துறையில் சிறந்து விளங்கியமைக்காக
-
சுதந்திர தின விழாவில் சம்பந்தன் எம்.பி. பங்கேற்பு: 1972 இற்குப் பின்னரான முதலாவது வரலாற்று நிகழ்வு
கொழும்பு: இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கலந்து கொண்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கை ஜன நாயக சோசலிச குடியரசாகப் பிர கடனப்படுத்தப்பட்ட பின்னர் இலங் கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர் களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை.
-
கொந்தராத்துக்கார் ஓடியோ ஒலிப்பதிவு விவகாரம்: கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள்
அபூ அம்னா காத்தான்குடி: 03.02.2015 காத்தான்குடி பரீட் நகர் வீதியை செப்பனிட்டு தரும் படி பொது மக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்ப்ட்டது. இந்த ஆர்ப்பாட்ட்த்தின் போது அனைத்து அரசியல் வாதிகளும் வருகை தந்தனர். ஆனால் இதன் முக்கிய சூத்திர தாரியான பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் சமூகமளிக்கவில்லை. இவர் சார்பாக நகரசபை தவிசாளர் அஸ்பர் வந்திருந்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கும் சம்பவ இடத்துக்கு வருகை தந்தார்.
-
இல்மியா அரபிக் கல்லுாரியின் 3 வது அல்-ஹாபிழ் டிப்ளோமா பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா
புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன ரிீதியான ஒற்றுமைக்கு எமது மக்கள் காத்திரமான பங்களிப்பை இந்த நாட்டில் செய்துவந்துள்ளார்கள் என்றும் கூறினார்.
-
குடும்பத்தலைவிகளுக்கான குடும்பவியல் கருத்தரங்கு
ஜுனைட்.எம். பஹத் காத்தான்குடி: குடும்பத்தலைவிகளுக்கான குடும்பவியல் கருத்தரங்கு காத்தான்குடி எப்.எம் மீடியா யுனிட் பெண்கள் குழுவினரின் அனுசரணையில் வசந்தம் அரங்கில் இன்று 04.02.2015 இடம்பெற்றது.