Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 19-03-2015 வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர் கே.எம்.ஏ.அஸீஸ் ஜேபி தலைமையில் நடைபெறவுள்ளதாக நிதியத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக் ஜேபி தெரிவித்தார்.

  • பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயத்தின் முப்பெரும் விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயத்தின் முப்பெரும் விழா 16-03-2015 இன்று திங்கட்கிழமை இக்றஃ வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. பூநொச்சிமுனை வரலாறு, பாடசாலையின் 50வது நிறைவு, அதிபர் ஏ.பீ.எம்.றஸூலின் 25 வருட கல்விச் சேவைப் பூர்த்தி போன்ற விடயங்களை மையப்படுத்தி இடம்பெற்ற இவ் முப்பெரும் விழாவில் கௌரவ அதிதிகளாக ஒய்வு பெற்ற அதிபரும், முன்னாள் காதி நீதிபதியுமான எம்.எம்.எம் .மஹ்ரூப் கரீம்,  

  • கிரிக்கெட்டுக்கு திரும்பினார் அமீர்

    லாஹூர்: ஸ்பொட்-பிக்சிங் சூதாட்ட குற்றச்சாட்டில் போட்டித் தடைக்கு உள்ளான பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் முஹமது அமீர் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளார். நான்கு ஆண்டு போட்டித் தடைக்கு முகம் கொடுத்த அமீர் செப்டெம்பர் மாதத்திலேயே சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப அனுமதிக்கப் பட்டுள்ளார்.

  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல்

    கொழும்பு: இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் இரு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பதுறியா ஜூம்மா பள்ளிவாயல் மஹல்லாவில் வசிக்கும் வசதி குறைந்த இரு குடும்பங்களுக்கு சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் வாழ்வாதார உதவியும்இமருத்துவ உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

  • காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் விஷேட மார்க்கச் சொற்பொழிவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தஃவா பிரிவின் ஏற்பாட்டில் விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி டெலிகோம் வீதியிலுள்ள மஹ்ஹதுஸ்ஸூன்னா மகளிர் அறபுக்கல்லூரி வளாகத்தில் இடம்பெறற்றது.

  • முறையற்ற வீதி அபிவிருத்திகள் குறித்து மக்கள் NFGGக்கு முறைப்பாடு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: திட்டமிடப்படாத, முறையற்ற அபிவிருத்தி காரணமாக தொடர்ந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுவருகின்ற சில வீதிகளை  (14.03.2015) NFGGயின் நகரசபை மற்றும் சூறாசபை உறுப்பினர்கள் பார்வையிட்டனர். காத்தான்குடி 6, 162 கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவிலுள்ள சில வீதிகள் குடியிருப்பாளர்களின் முறைப்பாட்டுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க இவ்வீதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

  • பலாலி ஓடுபாதையில் இராட்சத விமானங்கள்!

    பலாலி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணங்களுக்காக இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்தாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • லாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்

    லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. த்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

  • சஊதி அரேபியாவின் சஊத் பல்கலைக்கழகத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளை காத்தான்குடியில்

    – அல்மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: சஊதி அரேபியாவின் அல் இமாம் சஊத் பல்கலைக்கழகத்தின் கிழக்காசியாவுக்கான தொலைக்கல்வி கிளையொன்றினை காத்தான்குடியில் திறக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியுடன் இணைந்ததாக இந்நிலையம் இயங்குமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.

  • ‘அமைச்சர் றிஷாத்திற்கு அரசாங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கிறேன்’: அமைச்சர் ரன்ஜித் மத்தும

    – இர்ஷாத் ரஹ்மதுல்லா மன்னார்: நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று தேவையென்று சிறுபான்மை மக்கள் ஏக்கம் கொண்டிருந்த போது,அதனை உறுதிப்படுத்துவதற்கு துணிந்து அன்று ஆட்சியில் இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலனா அவரது கட்சி எடுத்த துணிகரச் செயலே மாற்றத்திற்கான காரணமாகியது.அதற்கு இந்த அரசாங்கம் சார்பில் தமது நன்றிகளை தெரிவிக்கின்றேன் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார மன்னாரில் தெரிவித்தார்.

  • வெளியேறியது அயர்லாந்து: காலிறுதியில் ஆஸியை எதிர்கொள்கின்றது பாகிஸ்தான், மே.தீ. வை சந்திக்கின்றது நியூஸிலாந்து

    அடிலெய்ட்: உலகக் கிண்ண கிரிக்கெட் பி – பிரிவு இறுதி லீக் ஆட்டத்தின் வாழ்வா? சாவா? போட்டியில், அயர்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இலகுவாக வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் காலிறுதியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.

←Previous Page
1 … 491 492 493 494 495 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar