-
இலங்கை சுற்றுலா பயணத்துறையை ஊக்குவிக்க துபாயில் இடம்பெற்ற முன்னேற்ற நடவடிக்கைகள்
– ஏ.சி.எம். சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவராலயம் , இலங்கைச்சுற்றுலா அபிவிருத்திச்சபையுடன் இணைந்து பல்வேறு உல்லாசத்துறை ஊக்குவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தது . கடந்த 2 ம் திகதி தொடக்கம் 7 ம் திகதி வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் இடம் பெற்ற அரபு சுற்றுலா கண்காட்ச்சியில் இலங்கையை சேர்ந்த 56 கம்பனிகளும் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின்லங்கா, இலங்கை தேயிலைச்சபை என்பன பங்கேற்றன.
-
வில்பத்துவில் மக்களை குடிஏற்றியதாகக் கூறப்படுவது திரிபுபடுத்தப்பட்டதாகும்
– வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு மன்னார்: மன்னார் வில்பத்து வனப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் மேற்கொள்ளும் பரப்புரைகள் உண்மை இல்லை என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:
-
காலியில் மற்றுமொரு பஸ் குடை சாய்ந்தது
– எம்.ஐ.அப்துல் நஸார் காலி: கொக்கலயிலிருந்து மீப்பே வைத்தியசாலையூடாக அக்குரஸ்ஸ வீதியில் காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று சற்று முன்னர் குடை சாய்ந்ததாக பொலீஸார் தெரிவித்தனர்.
-
தெரு மின்விளக்குகள் பொருத்தும் ஜுனைட் நளீமியின் முயற்சிக்கு பிரதேச மக்கள் பாராட்டு
– ஏ.எல். டீன்பைரூஸ் ஓட்டமாவடி: ஓட்டமாவடி பிரதேச பை உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமியின் முயற்சியினால் வீதி மின் விளக்குகள் பொருத்தும் செயற்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சீரெப் ஓட்டமாவடி பிரதேச சபையின் எல்லைக்குற்பட்ட பகுதிகளில் தெரு மின்விளக்குகள் பொருத்தும் ஐந்தாம் கட்ட நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.
-
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு வைத்தியசாலை இரத்த வங்கியில் இடம்பெற்றது.தாதி உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.தேவப்பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வினை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.
-
ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக பெரோஸா முஸம்மில் நியமனம்
ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக கொழும்பு மாநகரசபை முதல்வரின் பாரியார் பெரோஸா முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைப்பதைப்படத்தில் காணலாம்.
-
கட்டுப்பாடிழந்த விண்கலம் இன்று பூமியில் விழுகிறது
மொஸ்கோ: விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்கலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பூமி மீது எரிந்து விழவுள்ளது. ஆளில்லாத சரக்கு விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. எனினும் அந்த விண்கலம் புறப்பட்ட விரைவிலேயே தொடர்பை இழந்தது.
-
“நான் எந்தப் பதவியையும் கேட்டுப் போகப் போவதில்லை”: மஹிந்த
கொழும்பு: “நான் எந்தப் பதவியும் கேட்டுப் போகப் போவதில்லை” என முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாரஹேன்பிட்ட அபயாராம விகாரைக்கு வருகை தந்திருந்த அவரிடம் பிரதமர் வேட்பாளர் குறித்து வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
-
பிரிட்டிஷ் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்குமென எதிர்வுகூறப்பட்டுள்ளது
பிரித்தானியா உள்ளுர் நேரம் இரவு 11:45, இரவு 11 மணியிலிருந்து வெளியாகிய தேர்தல் முடிவுகளின்படி, லேபர் 3 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. லண்டன்: சற்று முன்னர் (இரவு 10 மணி) வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும்,
-
வலியையே உணர முடியாத பெண் பிரசவத்தின்போது தூங்கிவிட்டார்
றியோ: பிரேசில் நாட்டைச் சேர்ந்த மரிசா டெ தொலெதோ ஒரு அதிசய பிறவி. உலக அளவில் வலியை உணர முடியாத சுமார் 50 பேரில் இவரும் ஒருவர். அபூர்வமான மரபணு மாற்றம் காரணமாக இவரது உடலின் வலி மூளையால் உணரப்படுவதில்லை.27 வயதாகும் மரிசா ஒரு கால் விரலை பறிகொடுத்திருக்கிறார்.
-
’18 பில்லியன் டொலர் மதிப்புள்ள மஹிந்த ஊழல் சொத்துக்கள் வெளிநாட்டில்’
கொழும்பு: இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மூலம் சம்பாதித்த 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதை கூறியுள்ளார்.
-
காத்தான்குடி தள வைத்தியசாலையில் நவீன வசதிகளுடனான பற் சிகிச்கை பிரிவு
விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்று வந்த பற்சிகிச்சைப் பிரிவு தற்போது நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இன்று முதல் சிறந்த சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி வருகின்றது.