-
இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டம்: களுத்துறை,காலி மற்றும் மாத்தறைமாவட்டஇளம் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்
– எம்.ரீ.எம். பாரிஸ் கொழும்பு: இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, உரையாடல்,வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கு,சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய விழுமியங்களை மக்கள் மயப்படுத்துவதே இலங்கைமக்கள் அரங்கச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.
-
20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் செய்யப்படுகிறது
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு; அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்டு வருவதாக சட்ட வரைஞர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜீ.எஸ்.அருண ஷhந்த டி சில்வா தெரிவித்தார். முதற் பிரதி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் அது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படவுள்ளது.
-
மரணித்துவிட்ட மகளிர் அமைப்புக்கள்
– MJ காத்தான்குடி: சமூகவலைத்தளங்களின் அபார வளர்ச்சியின் காரணமாக இளம் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் கொலைகளும் இலங்கையில் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 18 வயதுடைய மாணவி வித்யாவின் கற்பழிப்புக் கொலையானது, டெல்லி மாணவியின் கற்பழிப்புக் கொலையைவிடவும் சோகத்தை இலங்கையில் மாத்திரமன்றி, முழு உலகிழும் வாழும் தமிழ் பேசும் இதயங்களை காயப்படுத்தியுள்ளது.
-
கோத்தபாயவின் கைது தடுக்கப்பட்டது எப்படி?
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்ற முக்கிய நீதியரசர் ஒருவரின் கணவரின் வைத்திய செலவிற்காக 2 மில்லியன் அனுமதித்து காசோலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நீதியரசர் ஈவா வனசுந்தர எனவும், இது தொடர்பிலான தகவல்களை ஜனாதிபதி அலுவலகம் தெரிவிப்பதாகவும் தற்பொழுது செய்திகள் வெளிவந்துள்ளன.
-
சவுதி: மரண தண்டனை நிறைவேற்றும் பணியாளர்களுக்கான விண்ணப்பம்
றியாத்: சவுதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றும் வேலைக்கு எட்டு பேரை நியமிக்க இணையத்தில் விளம்பரம் வெளியிட்டிருக்கிறது.சவுதி அரசின் சிவில் சேவைகள் அமைச்சின் இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் விளம்பரத்தில், இந்த வேலையைச் செய்ய சவுதி அரேபியப் பிரஜைகள் மட்டுமே தகுதியானவர்கள் என்றும், பட்டப்படிப்பு தேவையில்லை என்றும் இந்த வேலையைப் பெறுவதற்கு எந்த வித தேர்வு வழிமுறை ஊடாகவும் போகவேண்டியதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
-
ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக ஊழியர்களின் கறுப்புப்பட்டி போராட்டம்
– எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடாத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வொன்றின்போது தேசியக் கீதம் தமிழில் இசைத்தவேளையில் கிழக்குப் பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவர்களினால் கொடூரமாகத் தாக்கப்பட்டசம்பவத்தைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரியும் இக்கறுப்புப்பட்டி போராட்டம் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
ஏறாவூரில் குடிநீர் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
– எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: துபாய் நாட்டின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐயாயிரம் தமிழ் – முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு குடிநீர் வசதியினைப் பெறுவதற்கான உபகரணங்கள் வழங்கும் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
-
றிஷாதை அழிக்க சதி; அம்பலத்திற்கு வரும் ஆதாரங்கள்
– எ.எச்.எம். பூமுதீன் வில்பத்து: முஸ்லிம் சமுகத்தை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமிழக்கச் செய்யும் சதித்திட்டங்கள் மகிந்த ஆட்சியுடன் முற்றுப் பெறாது இன்று வரை தொடர்வது முஸ்லிம் சமுகத்தினர் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றிவித்துள்ளது.
-
“பாகிஸ்தான்-சிம்பாப்வே தொடருக்கு நடுவர் குழுவை அனுப்ப வேண்டாம்”: ஐ.சி.சி
டுபாய்: கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 பொலிஸார், பஸ் சாரதி உட்பட 6 வீரர்களும் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்குப்பின், எந்த ஒரு அணியும் பாகிஸ்தானுக்கு தங்களது வீரர்களை அனுப் புவது இல்லை முடிவு செய்தது.
-
சர்வதேச தமிழ் பௌத்த மாநாடு நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
கொழும்பு: சர்வதேச தமிழ், பெளத்த மாநாடு நாளை (20) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 200 பெளத்தர்கள் இலங்கை வருகைதரவுள்ளனர். இவர்களுள் 65 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் பெளத்தர்களாவரென இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் கலாநிதி பண்டித் மடுலுகிரியே விஜேரத்ன தெரிவித்தார்.
-
ஊரார் கோழியறுத்து இருவர் பெயரிலும் கத்தம்…?
– அப்துல் அஸீஸ் காத்தான்குடி: ‘ஊரார் கோழியறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவது’ – இப்படியொரு பழமொழி நமது சமூகத்தில் வழக்கில் இருந்து வருகிறது. இதனை உண்மைப்படுத்தும் வகையில் நமதூரில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது நடந்தேறி வருவதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது. இதிலொன்றுதான் நேற்று (17.05.2015) காலை இடம் பெற்ற கத்தமாகும்.
-
சிங்களத்தில் ஒலிக்கச் செய்த தேசிய கீதத்தை நிறுத்திய எம் பி
கிளிநொச்சி: கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே பாடப்பட வேண்டும்.