கொழும்பு: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு குறைந்தது 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் டி எம் ஜெயரத்ன செயலாளராக இருக்கும், மக்கள் கூட்டமைப்பு கட்சியின் கதிரை சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் புதிய முன்னணி ஒன்றை அமைத்து அதன்கீழ் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரணிலையோ அல்லது மஹிந்தவையோ ஆதரிக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று தெரியவருகிறது.
Published by

Leave a comment