Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பணநோட்டுகளை இணைக்கும் பரீட்சார்த்திக்கு தண்டனை!

    கொழும்பு: பரீட்சையின் விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைத்து கொடுக்கும் பரீட்சார்த்தி யார் என கண்டறிந்து அவர் விசாரணைக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அழைக்கப்படுவார் என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

  • பாகிஸ்தானின் 12வது அதிபராக இந்தியாவில் பிறந்த ‘மம்நூன் ஹூசைன்’ தேர்வு

    -OIT இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார். பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில்,  பிரதமர் நவாப் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த 73 வயதான மம்நூன் ஹூசைன் கலந்து கொண்டார்.

  • காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி  பொலிஸ் நிலையத்தின் 2013 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரிக்கு பின்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

  • ‘முஸ்லிம்களின் இப்தார் தொடர்பாக இன்றுதான் தெரிந்து கொண்டேன்’: பூஜித ஜெயசுந்தர

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கிழக்கு மாகாணம் என்பது சமூக நல்லிணக்கத்தில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னோடியான மாகாணமாக திகழ வேண்டுமென கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

  • உலகக் கிண்ண இருபது20 மகளிருக்கான தகுதிகாண் இறுதிப்போட்டி இன்று: இலங்கை, பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சையில்!

    -MJ டுப்ளின்: அயர்லாந்தில் இடம்பெற்றுவந்த இருபது20 மகளிர் உலகக் கிண்ணப்போட்டிக்கான தகுதிகாண் சுற்றுப்போட்டியில் இன்று 31-07-2013 இலங்கை மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் விளையாடுகின்றன.இப்போட்டி டுப்ளின் நகரில் உள்ளுர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. இறுதிக்கிண்ணம், இறுதிக் கேடயம் என இரு வேறு போட்டிகள் இன்று இடம்பெற இருக்கின்றன.

  • ‘2015 உலகக் கிண்ணமும் எங்களுக்கே’: டோனி

    டெல்லி: 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி கிண்ணத்தை கைப்பற்றும் என அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  • கிழக்கு மாகாண சபையின் மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் அம்பாறை மாவட்ட கூட்டம் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் தலைமையில் அக்கரைப்பற்றில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அக்கரைப்பற்று: கிழக்கு மாகாண சபையின் மாகாண அபிவிருத்தி அரங்கத்தின் அம்பாறை மாவட்ட கூட்டம் நேற்று (29.07.2013) அக்கரைப்பற்று ரி.எப்.சி மண்டபத்தில் கிழக்கு மாகாண  முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் தலைமையில்  நடைபெற்றது.

  • ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் அனுசரனையுடன் தந்தையை இழந்த அனாதை மாணவர்களுக்கான பெருநாள் ஆடைகள் மற்றும் கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பறகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யாவின் அனுசரனையுடன் தந்தையை இழந்த அனாதை மாணவர்களுக்கான பெருநாள் ஆடைகள் மற்றும் கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நிலையத்தின் உபதலைவர் அஷ்ஷேய்க் அன்ஸார் (மதனி) தலைமையில் நடைபெற்றது.

  • காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த குடும்பம் சகிதம் கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான்  காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த குடும்பம் சகிதம் கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வு கடந்த 28.07.2013 இஸ்லாமிக் சென்றர் ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மறுமை வாழ்வு எனும் தலைப்பில் அஷ்ஷேய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) சொற்பொழிவு நிகழ்த்தினார்.

  • மட்டு-முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்- தமிழ்-சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ மதத்தவர்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் 400 பேருக்கு மேல் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 30.07.2013 இன்று செய்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை  ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

  • ஜித்தாவில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி – அழைப்பிதழ்

    ஜித்தாவில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி   அழைப்பிதழ் நாள்: 2.08.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா

  • பிரித்தானிய வீசா பெற்றுக்கொள்ள பிணைத் தொகை வைப்புச் செய்ய நேரிடும்!

    லண்டன்: பிரித்தானிய வீசா பெற்றுக்கொள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிணைத் தொகையொன்றை வைப்புச் செய்ய நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களைச் சேர்ந்த ஆறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் வீசா விண்ணப்பங்களின் போது பிணைத் தொகை பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

←Previous Page
1 … 998 999 1,000 1,001 1,002 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar