Category: Your Kattankudy
-
தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்!
Thai Naadu கொழும்பு: தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
நாட்டில் மீண்டும் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படும் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: நாட்டில் குற்றச் செயல்கள் வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக மரண தண்டனையை செயற்படுத்துமாறு மக்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
பெண்கள் குழந்தைகள் அடங்கலாக பல்மிராவில் 400 பேரை சுட்டுக்கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்
– SHM பெய்ரூட்: சிரியாவில் உள்ள பல்மிரா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 400 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். ஈராக்கில் மொசுல், ரமாதி உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள பழமைவாய்ந்த பல்மிரா நகரை அண்மையில் கைப்பற்றினர்.
-
கோட்டாபய, பசில் ஆகியோருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வாசுதேவ நாணக்கார எதிப்பு
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோhர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தான் எதிப்புத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஹிரு தொலைக்காட்சியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.
-
இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு லண்டனில் கண்டுபிடிப்பு
லண்டன்: வடமேற்கு லண்டனில் உள்ள வெம்லி கால்பந்து மைதானத்திற்கு 200 மீற்றர் தொலைவில் வீடு கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மண் அள்ளும் இயந்திரத்திற்கு சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட பெரிய இரும்பு வெடி குண்டு ஒன்று சிக்கியுள்ளது. இதனையடுத்து, அப்பணியாளர்கள் உடனே இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித் துள்ளனர்.
-
கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ‘தீபன்’ ஈழத்தமிழ் அகதிகளின் கதை
லண்டன்: பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய “தீபன்” திரைப்படம் நேற்று (24-05-2015) நிறைவடைந்த கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது.
-
காத்தான்குடி பிரதேச முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு- ஓடியோ முழுமையாக இணைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று 24 ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி ‘கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்’டில் வைத்து விஷேடமாக சந்தித்து கலந்துரையாடினார்.
-
ஊடகவியலாளர்களின் சட்ட பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கை இணைய ஊடகவியலாளர் சங்கம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து றைட்ஸ் நைவ் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா – ஊடகக் கற்கைகள் நிறுவன அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட பாதுகாப்புக்கான பயிற்சிப்பட்டறை நேற்று 23 சனிக்கிழமை நடைபெற்றது.
-
ஹிரு தொலைக்காட்சியின் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறும் துவேசம் தொடர்கிறது
– அபூ அஸ்ஜத் கொழும்பு: மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகின்றது என்ற பழமொழி எமது ஞாபகத்துக்கு வருகின்றது.கடந்த சில மாதங்களாக ஹிரு தொலைக்காட்சி உள்ளிட்ட சில சிங்கள ஊடகங்கள் அப்பட்டமான திரிவுபடுத்தப்பட்ட செய்தியாக வில்பத்து காட்டை முஸ்லிம்கள் அழித்து குடியேறுவதாக முன்னெடுத்து வந்த பிரசாரம் பொய்யானது என்பதை அண்மையில் அதே தொலைக்காட்சியில் தோன்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன் தெளிவுபடுத்திய போதும்
-
இன்று நடைபெறவிருந்த NFGGயின் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) இன்று (24.05.2015) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி குட்வில் சந்தியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் நடைபெற மாட்டாது என்று NFGG தெரிவித்துள்ளது.
-
சாய்ந்தமருதில் புதிய விளையாட்டு மைதானம் கோலாகலமாக திறந்து வைப்பு
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது புதிய விளையாட்டு மைதானம் கரைவாகு பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 7 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிழக்வு நேற்று (23) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.