Category: Your Kattankudy
-
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தக் குருநாகல் பிள்ளைகள் மாபெரும் அர்ப்பணிப்பைச் செய்துள்ளனர்
குருநாகல்: நாட்டிலுள்ள சகல பகுதிகளுக்கும் நாளாந்தம் சடலங்கள் செல்லும் யுகத்தை தாமே முடிவுக்குக் கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் ஐ.ம.சு.முவின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ நேற்றையதினம் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
-
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஆழுத கதை
– அபூ அஸ்ஜத் ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஆழுத கதை போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முஸ்லிம்கள் தொடர்பில் கருத்து கூறியிருக்கின்றார்.இன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரசாரக் கூட்டதொன்றில் இந்த முஸ்லிம்களின் எதிர்காலம் மத்திய அரசாங்கத்திடம் இல்லை என்று சொல்லியிருப்பதை வைத்து மேற்சொன்ன பழமொழி ஞாபகத்துக்கு வருகின்றது.
-
SLMC + NFGG இணைந்து நடாத்தும் முதலாவது பிரச்சாரக் கூட்டம்
– NFGG காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெறவுள்ளது.
-
ஹிஸ்புல்லாஹ்வை மீண்டுமொருமுறை பிரதிநிதியாக்க ஒன்றுபடுவோம் – யுனைடெட் விளையாட்டு கழகம் வேண்டுகோள்
– எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ்வை மீண்டுமொருமுறை பிரதிநிதியாக்க ஒன்றுபடுவோம் என காத்தான்குடி யுனைடெட் விளையாட்டு கழகம் துண்டுப் பிரசுரம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இன்றைய அரசியல் சவால்களுக்கு முகங்கொடுக்கும் கட்சியாக அ.இ.ம.கா. இருக்கிறது
– அபூ அஸ்ஜத் கொழும்பு: இலங்கையின் அரசியல் களத்தில் பேசப்பட்ட பெரும்பான்மை கட்சிகளின் நலவு இடதுகளை கடந்து இன்று இரு சிறுபான்மை கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன மாறியுள்ளது.குறிப்பாக இன்றைய அரசியல் அரங்கில் சவால் விடும் அளவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிருப்பது தொடர்பில் ஏன் பேசப்படுகின்றது என்பதை நோக்குவது பொருத்தமாகும் என்பது எனது பார்வையில் பட்டதாகும்.
-
மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தேசத் தலைவராக்குவதே எமது அணியின் எதிர்காலத் திட்டம் – பந்துல குணவர்தன
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தேசத்தலைவராக்குவதே எமது அணியின் எதிர்காலத் திட்டமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஹோமாகம நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
-
இலங்கை – பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது நாள் போட்டி இன்று
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: இலங்கை அணிக்கும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கட் அணிக்கும் இடையிலான ஐந்து போட்டித் தொடர்களைக் கொண்ட ஒரு நாள் போட்டிகளின் மூன்றாவது போட்டி இன்று (19) நடைபெறுகின்றது. இரவு பகல் போட்டியாக நடைபெறும் இந்த ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
-
அரசியலில் இருந்து ஓய்வு – நிர்மல கொத்தலாவல அறிவிப்பு
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக பிதியமைச்சர் நிர்மல கொத்தலாவல நேற்றைய தினம் (18) அறிவித்தார். களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது தீர்மானத்திற்கான காரணங்களை அவர் தெளிவுபடுத்தினார்.
-
தேர்தல் பிரச்சார ஒழுக்கவிதிக் கோவை வர்த்தமானியில் வெளியிடப்படும்
– எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் வாக்காளர்களையோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களையோ குழுக்களாக தமது இல்லங்களுக்கு வரவழைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது, தமக்கு எதிரான கட்சி அல்லது வேட்பாளருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
-
கலிஃபோர்னியா தீ விபத்தில் வாகனங்கள் எரிந்து நாசம் (காணொளி)
கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் – 15 என்ற நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தீப்பிடித்து, அந்தத் தீ நெடுஞ்சாலையிலும் பரவியில் பல வாகனங்கள் தீயில் கருகின. இந்தத் தீயின் காரணமாக, கயோன் கணவாயில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெருநாள் கார் குண்டுத் தாக்குதலில் 120 பேர் பலி
பக்தாத்: கிழக்கு ஈராக்கில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 120 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்று ஒரு சந்தைப் பகுதியில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 130 பேர் காயமடைந்திருப்பதாக தியாலா மாகாண கவுன்சில் தெரிவித்துள்ளது.
-
ஹக்கீமின் கலந்துரையாடலில் அமளிதுமளி (காணொளி)
ஏறாவூர்: ஏராவூரில் நேற்று 17.07.2015 வெள்ளிகிழமை இப்தார் நிகழ்சியோடு முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரசின் போராலிகள் கருத்து தெரிவிக்கையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக சிறு கைகளப்புடன் பத்து நிமிடங்களுக்கு மேலாக கலந்துரையாடலில் அமளிதுமளி ஏற்பட்டது.