Category: Your Kattankudy
-
மஹிந்தவின் கொடூரங்களை நாம் உரைத்தால் உன் மூளை கொதிப்பது ஏன்..?
அன்பான முஸ்லிம் சகோதரர்களே! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற இன்னும் இருப்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களே. தான் இந்த நாட்டை மன்னர் ஆட்சிபோன்று அசைக்கமுடியாத குடும்ப ஆட்சியாக தனது ஆட்சியை மாற்ற பல கோடிகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி, 18வது திருத்தச்சட்டத்தை ஏற்படுத்தி வெற்றிபெற்ற மஹிந்த கூட்டணி, அல்லாஹ்வின் உதவியால் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி, தனக்கு மேல் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மகிந்தவுக்கு பாடம் கற்பித்து அரசியல் சரித்திம் படைத்தனர்…
-
பொதுத்தேர்தல்-2015: ஐ.தே.க. வெற்றிபெறும்
கொழும்பு: பொதுத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஆய்வு அறிக்கைக்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி 12 மாவட்டங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 08 மாவட்டங்களில் வெற்றிபெறும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலதிக மாவட்டங்களில் பெரும்பான்மையை பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
காதல் விவகாரமா தாஜூதீன் கொலை..?
கொழும்பு: வசீம் தாஜுடீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு வீதி விபத்து ஒன்றில் மரணமானதாக கூறப்பட்ட வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
-
NFGGயின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மகளிர் மாநாடு”
NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மகளிர் மாநாடு” இன்று மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.
-
“தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கு எதிரானவர்களே! அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை பயன்படுத்தி எம்மை தோல்வியடையச்செய்ய முயற்சிக்கின்றனர்”: ஹிஸ்புள்ளா
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: “தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கு எதிரானவர்களே அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை பயன்படுத்தி எம்மை தோல்வியடையச்செய்ய முயற்சிக்கின்றனர்” இவ்வாறு சற்றுமுன்னர் (11.08.2015) காத்தான்குடி பஸ் டிப்போ அருகில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாம் இலக்க வேட்பாளர் எம் எல் ஏ எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்.
-
ஓலிபரப்புச் சாதனங்களை பயன்படுத்திச் செய்யப்படும் உள்ளூர் நடமாடும் வர்த்தகமும் அவற்றை சீராக நெறிப்படுத்த வேண்டியதன் அவசியமும்
– எம்.ஐ. அப்துல் நஸார் வாடிக்கையாளர்களின் காலடிக்கே பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்வதென்பது வியாபார வெற்றிக்கான வியூகமாகப் பார்க்கப்படுகிறது. வர்த்தகப் போட்டி, விற்பனையினை அதிகரித்துக் கொள்ளல், விரைவான வியாபாரம், திரவத் தன்மையுடனான பணப்புரள்வு என்பன அதற்கான உள்ளார்ந்த நோக்கங்களாக இருந்தாலும், வாடிக்கையாளருக்கு இலகுவாகப் பொருட்களைக் கிடைக்கச் செய்தல், அவர்களின் நேர விரயத்தை தவிர்க்க
-
தேர்தலை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
கொழும்பு: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு, எதிர் வரும் ஓகஸ்ட் 17-19 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு, ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்குமாறும் தெரிவித்துள்ளது.
-
கூகுள்- சுந்தர் பிச்சை: கடந்து வந்த பாதை
லண்டன்: கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பதவியேற்றிருக்கும் 43 வயது சுந்தர் பிச்சையின் வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது. சென்னையில் பிறந்தவரான அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய அவர், பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகள் பலவற்றில் வெற்றிபெற்றிருக்கிறார்.
-
அட்டாளைச்சேனையின் இறுதிக் காலம் – ஒற்றுமையின்றேல் ஒன்றுமேயில்லை
அட்டாளைச்சேனை: பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்து ஓடிக்கொண்டிருக்கும் இக்கடைசித் தறுவாயில் சிலர் பல கனவுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த கட்டுரையை உங்களுக்கு வழங்குவது முக்கியமென கருதுகிறேன். அட்டாளைச்சேனை என்னும் ஒரு பிரதேசம் கிழக்கு மாகாணத்தில், அம்பாரை மாவட்டத்தில், அமைந்துள்ளது. சகல வசதிகளும் காலடிக்கே கிடைத்துள்ளதால் அப்பிரதேச மக்கள் எந்த சிக்கல், எந்தப் பிரச்சனையுமின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
-
புதிய காத்தான்குடி பைசால் வீதி சந்தியில் இடம்பெற்ற NFGGயின் பிரச்சாரக் கூட்டம்
– NFGG காத்தான்குடி: நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடி, 2ம் குறுக்கு, பைசால் வீதிச் சந்தியில் நேற்று இடம்பெற்றது.
-
பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா நாளை காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு அடங்கிய பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா நாளை 12-08-2015 புதன்கிழமை மாலை 4.மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
-
“அபிவிருத்தி அரசியலை மட்டும் காட்டி அரசியல் செய்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினதும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினதும்; தேர்தல் வெற்றி கேள்விக் குறியாகியுள்ளது”
ஹாசிப் யாஸீன் கல்முனை: அபிவிருத்தி அரசியலை மட்டும் காட்டி அரசியல் செய்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினதும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினதும்; தேர்தல் வெற்றி கேள்விக் குறியாகியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.