Category: Your Kattankudy
-
வெற்றிக்களியாட்ட, அடிதடி ஊர்வலங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்
காத்தான்குடி: நேற்று மாலை ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிக்களிப்பு களியாட்ட அதிரடி ஊர்வலத்தின் பின்னர், ஹிஸ்புல்லாஹ்வுக்கு இருந்து வந்த ஆதரவுகள் அவருக்கான பலத்த சரிவை ஏற்படுத்தி இருப்பதுடன், ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களின் மோசமான நடவடிக்கைகள் இன்று உலக முழுவதும் கேவலமாகப் பேசப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
-
வை.எல்.எஸ் ஹமீட் நீக்கம்; ரிசாத் பதியுதீன் அதிரடி அறிவிப்பு
ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் உடன் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் கட்சியின் உயர்பீடம் இன்று காலை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
-
YLS இன் ஒரு தலைப்பட்சமான முடிவுகள் கட்சியின் போராளிகளை சீற்றமடையச் செய்துள்ளது
எம்.ரீ.எம்.பாரிஸ் மட்டக்களப்பு: அகில இங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் தொடர்பில் YLS. ஹமீட் அவர்கள் வெளியிட்ட கருத்து தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அமைப்பாளர் MJ முஹம்மத் அன்வர் அவா்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை.
-
“குறுக்கு வழியூடாக தேசியப்பட்டியல் பெற்றவர்கள் இன்று வன்முறைகளை கட்டவிழ்த்துள்ளதை கண்டிக்கின்றோம்”: ஷிப்லி பாறுக்
அபூ அல்தாப் காத்தான்குடி: குறுக்கு வழியூடாக தேசியப்பட்டியல் பெற்றவர்கள் இன்று வன்முறைகளை கட்டவிழ்த்துள்ளதை கண்டிக்கின்றோம் இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
தேர்தலும் பாடங்களும் திட்டங்களும்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு அம்சங்களை எமக்கு உணர்த்தினாலும் அவற்றுக்கு மத்தியில் பின்வரும் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுக்காட்ட முடியும் இனவாத சக்திகள் மிகத் தெளிவாகவே முஸ்லிம் விரோதப் போக்கைக் கொண்டுள்ள பொதுபலசேனாவின் கட்சிக்கு படுதோல்வி கிட்டியிருப்பதையிட்டு எம்மில் எவரும் சந்தோசப்படாமல் இல்லை. ஆனால் நாடளாவிய ரீதியில் மொத்தமாக அக்கட்சிக்கு சுமார் 20107 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதிலிருந்து அந்த தீவிரவாத சிந்தனையில் முழு நாட்டிலும் குறைந்தது இருபத்தி மூவாயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை…
-
வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர் குறிப்பிட்டு கடாபி ரெஸ்டூரண்ட் ஹோட்டல் காசாளர் ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களினால் சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள கடாபி ரெஸ்டூரண்ட் ஹோட்டல் காசாளர் வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு வழங்கிய விஷேட செவ்வி எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
-
“வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”: ஹிஸ்புல்லாஹ் (ஒலிப்பதிவு)
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டதையடுத்து காத்தான்குடியில் இடம்பெற்ற மகிழ்ச்சி களிப்பின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை யாராக இருந்தாலும் சரி, கைது செய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிசாருக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
“ஜனாதிபதி காத்தான்குடியில் நல்லாட்சியின் செயற்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்” NK றம்ழான் வேண்டுகோள்
காத்தான்குடி: ஜனாதிபதி அவர்கள் காத்தான்குடியில் நல்லாட்சியின் செயற்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னால் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் NK றம்ழான் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கையில்,
-
“காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா பள்ளிவாயல் தாக்கப்படவில்லை”: பள்ளிவாயல் தலைவர் ரவூப்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் காத்தான்குடியில் நேற்று 21 வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடியில் வன்முறை இடம்பெற்ற இடங்களை சுட்டிக்காட்டும் போது தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலும் ,தாருல் அதர் அத்த அவிய்யா பள்ளிவாயலும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
-
“ஹிஸ்புல்லாஹ்வை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவில் இருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும்”: சிப்லி பாரூக்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று 21 வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நேற்று 21 வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
-
தாக்குதலுக்குள்ளானவர்களை சிப்லி பாரூக் சந்தித்தார்
அபூ அல்தாப் காத்தான்குடி: நேற்று (21) மாலை ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் அறிவிக்கப்பட்டதையடுத்து வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் தேசிய தௌகீத் ஜமாஅத் அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கியதையடுத்து இரு சாராருக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்றது.
-
காத்தான்குடியில் நல்லாட்சி ஆதரவாளர்மீது வன்முறை கட்டவிழ்ப்பு! ஒரு பொலிசார் உட்பட 12 பேர் காயம்!! பள்ளிவாசலிலும் பட்டாசு வீச்சு!
விசேட நிருபர் (மூன்றாம் இணைப்பு) காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு, தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி நேற்று வழங்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் நல்லாட்சி அரசாங்கத்திற்காகப் பாடுபட்ட, ஆதரவளித்து வாக்களித்தவர்கள்மீது பாலிய வன்முறைகள் இடம்பெற்றன.