- அபூ அல்தாப்
காத்தான்குடி: நேற்று (21) மாலை ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் அறிவிக்கப்பட்டதையடுத்து வெற்றிக்களிப்பில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் தேசிய தௌகீத் ஜமாஅத் அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை தாக்கியதையடுத்து இரு சாராருக்குமிடையில் கைகலப்பு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் வேட்பாளராக களமிறக்கப்பட்டு 11,442 விருப்பு வாக்குகள் பெற்ற பொறியியலாளர் ஷிப்லி பாறுக், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச்சென்று காயமுற்றவர்களை பார்வையிட்டதுடன் தேசிய தௌகீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்கும் சென்று அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடுவதை படங்களில் காணலாம்.
Leave a comment