Category: Your Kattankudy
-
காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன்; அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்
– அபூ அய்யாஷ் காத்தான்குடி: காலஞ் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் (மர்ஹூம்) ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் புதல்வன் அஷ்ஷெக் அல்ஹாபிழ் மௌலவி பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
-
குவாண்டனமோ சிறையில் தொடரும் போராட்டம்
-OIT நியூயோர்க்: அமெரிக்காவால் கியூபா அருகே குவாண்டனமோ சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிற பயங்கரவாத சந்தேகநபர்களின் போராட்டம் உண்ணாநிலைப் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு சந்தேக நபர்களை அனுப்புவதைத் தவிர்க்கவே ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை ஒபாமா நிர்வாகம் படுகொலை செய்வதாக திடுக்கிடும் குற்றச்சாட்டை புஷ் ஆட்சிக்கால வழக்கறிஞர் ஜோன் பெல்லிங்கர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
-
அசாத் சாலி அரசுக்கு சவாலான நபரல்ல!
கொழும்பு: அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல், இனவாதம், இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலான பல குற்றச்சாட்டுகளின் பேரிலே கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத் தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
-
தலை கொடுத்த தளபதியாம் ஆஸாத் சாலி
– மதியன்பன் பெறுப்புள்ள தலைமைகள் வாய்கள் பொத்தி பொந்துக்குள் எலிகளெனப் புகுந்த வேளை இறுக்கமுடன் சமூகத்திற்காய் குரல் எழுப்பி இனவாத சக்திகளின் முகத்தின் திரையை அறுத்தெடுத்த நம் தலைவன் ஆஸாத் சாலி
-
அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் – அகில இலங்கை உலமா கவுன்சில்
-பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடும் படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
-
WWS தொழிலாளர் நலன்புரிச் சங்க புதிய நிருவாக தெரிவு
– ரைஸ் கிண்ணியா: தனியார் நிருவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒன்றுகூடல் தொழிலாளர் தினமான நேற்று புதன்கிழமை கிண்ணியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. உழைப்பிற்காக தன் வியர்வையை நிலத்தில் சிந்தி உழைக்கின்ற தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்ற போது அங்கு உரிமைக்கான போராட்டம் ஆரம்பமாகிறது. அந்த வகையில் தொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உரிமைக்கான ஒன்றுகூடலின் போது புதிய நிருவாகத் தெரிவும் இடம்பெற்றது.
-
அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டும்-மு.முதல்வர் சி.சந்திரகாந்தன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி ஏற்படுத்தப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
-
ஜாமிஆ நளீமிய்யா புதிய மாணவர் பிரவேசம் – 2013: பெயர் விபரங்கள்
– பஹ்மியூஸூப் பேருவளை: பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் 2013/2014 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக ஏப்ரல் 28,29,30 ஆம் திகதிகளில் நளீமிய்யா வளாகத்தில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் பின்வரும் 50 மாணவர்கள் இக்கல்வியாண்டில் முதலாம் வருடத்தில் இணைந்து கல்வி கற்பதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
-
கிழக்கு மாகானத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் திருகோணமலையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகானத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் (30.04.2013) கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.சரத் அபேகுணவர்தன தலைமையில் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் திருகோணமலையில் நடைபெற்றது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும்; தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களினால் அபகரிப்பதற்கான முயற்ச்சிகள் இடம் பெறுகின்றது-த.தே.கூ. மட்டு .பா-உ. பொன். செல்வராசா –எம்பி.
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும்; தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களினால் அபகரிப்பதற்கான முயற்ச்சிகள் இடம் பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா அதனை தடுத்து நிறுத்துமாறு அரசாங்க அதிபரை கேட்டுள்ளார்.
-
நீதிமன்றில் சரணடைந்த ஆளுங்கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மாணவி பாலியல் சேஷ்டை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரினால் தேடப்பட்டு பின்னர் நீதிமன்றில் சரணடைந்து எதிர்வரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடி ஆளுங்கட்சி நகர சபை உறுப்பினரும் பிரபல பொருளியல் பாட ஆசிரியருமான எம்.எச்.எம்.பாக்கீர் 1இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அசாத் சாலி இன்று கைது!
– விசேட நிருபர் கொழும்பு: அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலி, இந்தியாவில் அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டிருந்த கருத்துக்களால் பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் இன்று காலை 6:30 மணியளவில் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.