Author: yourkattankudy.com
-
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் – ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கையில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் கடந்த (25) வெள்ளிக்கிழமை நாடலாவிய ரீதியில் பாரிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
-
மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இடம்பெற்றது.
-
நரேந்திரமோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி!
இந்தியா: இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திரமோடி அவர்களின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் குறைந்தபட்சம் 4 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
-
சவூதியில் கார் ஓட்டும் 60 பெண்கள்: அதிர்ச்சியில் சவூதி!
– SHM ரியாத்: சவுதியில் தடையை மீறி ரகசியமாக 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்களே இந்த வீடியோவை யூடியூப்பிலும் தடையை குறித்து பேசி வருபவர்களுக்கும் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சவுதி அரேபிய சாலைகளில் பெண்கள் கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களை இயக்க அந்நாட்டு மதவாதிகள் தடை விதித்துள்ளனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
-
நான் மலாலா! ‘I am Malala’
கராச்சி: உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது… தலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி, உயிர் பிழைத்திருக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதி வெளியிட்டிருக்கும் ‘ஐ ஆம் மலாலா ’(I AM MALALA) எனும் சுயசரிதை. நள்ளிரவில் உருவாக்கப்பட்ட ஒரு தேசத்தில் இருந்து வந்தவள் நான். ஒரு நண்பகலுக்குப் பின், ஏறத்தாழ மரணம் அடைந்தேன். எல்லாவற்றையும் புரட்டிப் போட்ட அந்த நாள், செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2012.
-
கல்முனையில் கயிறிழுப்பு
கல்முனை: கல்முனை மேயர் பதவி விவகாரம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில் மேயர் சிராஸ் மீராசாஹிப் பதவி விலகுவாரா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எழுந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்கென இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியை தன் வசமாக்கியது.
-
‘விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும்’
யாழ்ப்பாணம்: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. வடமாகாண சபையின் முதலாவது அமர்வு யாழ்ப்பாணம் கைதடியில் நடைபெற்றதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்களின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளியன்று மாலை நடைபெற்றது.
-
கடுகஸ்தோட்ட – உக்குரஸ்ஸபிட்டிய பள்ளிவாசல் உடைப்பு!
கட்டுகஸ்தோட்ட: கட்டுகஸ்தோட்ட உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசலை இன்று 26-10-2013 அதிகாலை இனம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் பள்ளி வாசலின் கதவு உடைக்கப்பட்டு பிரதான அரையின் கதவும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
-
காங்கேயனோடை அல்-அக்ஸாவில் மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி
முகம்மட் சஜி காங்கேயனோடை: மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்குற்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகாவித்தியாலத்தின் முன்பள்ளி மாணவர்கள் ஏற்பாடு செய்த மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை அரம்பித்து வைக்கப்பட்டது.
-
மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
அரச ஊழியர்களுக்கான உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள் தோறும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூதின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில்
-
நவநீதன் பிள்ளையின் முன்னோர் இலங்கைக்கு வந்திருந்தால் அவரும் இன்று மலையகத்தில் கொளுந்துகூடை சுமந்திருப்பார் மகளிர் இணைய கூட்டத்தில் மனோ கணேசன்
ஏ.சி.ஏ. அஸீஸ் பாமன்கடை: இந்திய வம்சாவளி தமிழ் பூர்வீகத்தை கொண்ட தென்னாபிரிக்க பிரஜையான நவநீதன் பிள்ளை ஒரு இரும்பு பெண். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. ஐநா அதிகாரி. சட்ட அறிஞர். உலகம் முழுக்க வாழும் தமிழ் பெண்களுக்கெல்லாம் அவர் பெரும் உதாரணம். இந்திய வம்சாவளி தமிழர்களான நவநீதன் பிள்ளையின் முன்னோர் தென்னிந்தியாவில் இருந்து நல்லவேளையாக தென்னாபிரிக்காவுக்கு போனார்கள்.