Author: yourkattankudy.com
-
காத்தான்குடி ஆதார வைத்திய சாலைக்கு அவசரமாக உதவுங்கள்.
ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்திய சாலையின் அத்திய,அவசிய தேவைகள் தொடர்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அண்மையில் இடம் பெற்றது.
-
அமைச்சரவையில் ரிசாத் கொந்தளிப்பு அமைதிப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி
ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் , அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது.
-
இலங்கை மேற்கிந்திய போட்டியில் பிரதியமைச்சர் ஹரீஸ்
ஹாசிப் யாஸீன் கொழும்பு: இலங்கை மற்றும் மேற்கிந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் பகல் இரவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (04) புதன்கிழமை ஆர்.பிரரேமதாஸா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
-
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
புத்தளம்: புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை (06.11.2015) பிற்பகல் 2.30 மணிக்கும் பாடசாலையில் இடம் பெறவுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்வதுடன், கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்.எம்.எச்.எம். நவவி விசேட அதிதிகளாக வடமேல் மாகாண சபை உறுப்பினர், என்.ரீ.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ்,
-
போர்க்குற்ற விசாரணையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையும் சேர்க்கப்படவேண்டும்
அம்பாரை: இலங்கையில் ஐ.நா . அனுசரணையுடன் நடைபெறவுள்ள யுத்த குற்ற விசாரணை 1985 ம் ஆண்டு தொடக்கம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை உட்பட முஸ்லிம்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் பிரகடனமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
-
கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை தற்போது அதிகரித்து காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகள் தற்போது கூட்டாக அழைந்து திரிவதாகவும் இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்து இடம்பெறுவதற்கு
-
காத்தான்குடி நகரசபைக்கு எதிரான கணவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காத்தான்குடி: காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட ஏ.எல்.எஸ்.எல் மாவத்தையில் உள்ள குப்பைகளை நகரசபை ஊழியர்கள் அகற்ற மறுத்து தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதைக்கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவருடன் அப்பகுதி மக்கள் சிலரும் காத்தான்குடி நகரசபைக்கு எதிராக இன்றுக்காலை அப்பகுதியின் பிரதான சந்தியான அலியார் சந்தியில் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர் .
-
பழைய அமைச்சர்களை தூக்கி வீசினார் – இன்றைய மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்
சபி அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் காலா காலமாக வாக்கு வங்கியாகவே செயற்பட்டு வருகிறார்கள் ஆனால் அதன் மூலம் பிரயோசனம் கிடைக்கின்றதா என்று பார்த்தால் பூச்சியத்தால் பெருக்கிய பெரும் பூச்சியமாகவே விடைதெரிகிறது.
-
வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை
எம்.எஸ்.எம். நூர்தீன் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஓங்கி உயர்ந்த நவீன கட்டிடமாக காணப்பட்ட போதிலும் ஆளணிப்பற்றாக்குறையுடனும் வளப்பற்றாக்குறையுடனும் இயங்கி வருகின்து. இதனால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் பலதரப்பட்ட அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர்.
-
மட்டக்களப்பில் அடை மழை; தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி கோயில்குளம் பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் ,வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
-
காத்தான்குடியில் நிறுக்கும், அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையிலுள்ள நிறுக்கும் ,அளக்கும் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
சண்டை பிடிப்பது அவர்களாயினும் தலைகுனிவது சமூகம்தான்
– ஐ. எல். எம். றிபாஸ் கடந்த வார அரசியல் களநிலவரங்களில் களைகட்டியது கிழக்கு பிரதேச அரசியல் தலைவர்களின் ரிப்பன் வெட்டும் போட்டியும் அதன் பின்னர் அவர்கள் வழங்கிய பேட்டிகளும்தான். உலகெங்கும் முஸ்லிம் சமுகம் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் பெரும் துயரங்களுக்கும் தொடர்ச்சியாக ஆட்பட்டு நொந்து நிற்கிறது. அந்த சமூகத்திற்கெதிரான சதி நடவடிக்கைகள், அந்த சமுகத்தை கருவறுப்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரந்துகிடக்கிறது.