Author: yourkattankudy.com
-
தம்புள்ளை: ஒரே நாளில் காலி செய்யச் சொல்வதாக மக்கள் புகார்
தம்புள்ளை: இலங்கையில் தம்புள்ளை நகருக்கு அருகிலுள்ள பாதெனிய நகரில் பௌத்த புனிதப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் வாழ்பவர்கள், மாற்றுக் காணியோ அல்லது நஷ்ட ஈடோ வாங்கிக்கொண்டு அப்பிரதேசங்களில் இருந்து காலிசெய்ய வேண்டும் என்ற ஒரு உடன்பாடு சில காலம் முன்பு எட்டப்பட்டிருந்தது.
-
சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், இலங்கைக்கான நோர்வே நாட்டின் உயர் ஸ்தானிகரிடத்தில் வேண்டுகோள்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், 18 வயதை பூர்த்தியடைந்த அனைவரினதும் வாக்குரிமை என்பவைகளை உறுதிப்படுத்தியதன் பின்னரே அது நடத்தப்பட வேண்டும் என்பதே வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் கோறி்க்கையாகும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், இலங்கைக்கான நோர்வே நாட்டின் உயர் ஸ்தானிகரிடத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.
-
ஜோர்தான் பணிப்பெண் மரணம்: ‘நீதி விசாரணை வேண்டும்’
கொழும்பு: ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இலங்கைப் பணிப் பெண்ணின் மரணம் தொடர்பாக விசாரனை நடாத்தி நீதி வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
-
பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கான 10வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு!
– MJ லண்டன்: பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா இஸ்லாமிய போரம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கான 10வது மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் லெஸ்டர் நகரில் இடம்பெற உள்ளது.
-
இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் இனி பயிற்சி கிடையாது: ஏ.கே.அந்தோணி
– OIT தஞ்சாவூர்: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தமிழகத்தில் இனி இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
-
இலங்கையில் மாடுகளை கொலை செய்வதனை தடுக்க முடியாது: ஜோன் செனவிரட்ன
கொழும்பு: இலங்கையில் மாடுகளை கொலை செய்வதனை தடுக்க முடியாது என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். மாடுகளை இறைச்சிக்காக கொலை செய்வதனை தடுப்பது தொடர்பில் சட்டங்கள் இயற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
வெசாக் தினத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிங்கள மக்களின் பண்டிகைத் தினமான வெசாக் தினத்தில் மது போதையில் அபாயகரமாக வாகனம் செலுத்திய சாரதியை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து அதிகாரி ஐ.பி.ஜயவர்த்தன தெரிவித்தார்.
-
திருட்டுச்சம்பவம் தொடர்பில் மட்டுவில் 1இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது-ஒருவர் கைது
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் தம்பியப்பா வீதி,ஆரையம்பதி எனும் முகவரியில் உள்ள வீடொன்றில் கடந்த ஏப்ரல் 25ம் திகதி களவு போன சுமார் 1இலட்சத்து 60ஆயிரம் ரூபா பெறுமதியான LCD தொலைக்காட்சி அடங்கலாக செல்லிடத் தொலைபேசிகள் நேற்று முன்தினம் மே 25ம் திகதி காத்தான்குடிப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க தெரிவித்தார்.
-
பிக்கு தீ குளிக்கவில்லை! கொல்லப்பட்டார்!
-AF 47 கொழும்பு: கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகை அருகில் போவத்த இந்திரட்ன தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை எனவும், இத்தீக்குளிப்புக்குப் பின்னால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதும் மக்களை சிந்திக்கவைத்திருக்கின்றன.
-
இரண்டு வாரங்களுக்கு காற்றுடன் மழை
கொழும்பு: தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் பல பிரதேசங்களில் கடுங் காற்றுடன் கூடிய அடை மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
-
கொழும்பில் பௌத்த பிக்குகள் காவல்துறையுடன் மோதல்
கொழும்பு: இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.