Author: yourkattankudy.com
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலும் பங்கு வீதமும்….
கொழும்பு: வடக்கு மாகாண சபைத்தேர்தலில் 46 சதவீத ஆசனங்களையே ஈபிடிபிக்கு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல் கிடைத்துள்ளன. அத்துடன் முதன்மை வேட்பாளராக டக்ளஸ் தேவானந்தாவை களமிறங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
-
மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் ‘ஈஸ்ட் லகூன்’ நட்சத்திர ஹோட்டல் – அமைச்சர் பசில் ராஜபக்ஷ திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் எங்கும் இல்லாதவாறு மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் – மட்டக்களப்பு சின்ன உப்போடை லேக் வீதியில் 35 கோடி ரூபா செலவில்
-
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் உதவித் திட்டம் – 2013/2014
எமது ஆயிஷா பவுண்டேசன் அமைப்பினால் வழங்கப்படவுள்ள மேற்படி புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் உதவிபெற விரும்பும் கீழ்க்காணும் அடிப்படைத் தகைமைகளைக் கொண்ட மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
-
பல்கலைக்கழகத்திக்கு தெரிவான மாணவிகள் ஏ .சீ யஹ்யாகான்னால் கௌரவிப்பு
– றிஸ்கான் முகம்மட் கல்முனை: கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் க .பொ .த உயர்தரப் பரீட்சை எழுதவிருகின்ற மாணவர்களின ‘தொடுவானம்’ எனும் நிகழ்வும், ‘மரகதம் -03’ எனும் மலர் வெளியீட்டு விழா கல்லூரியில் அதிபர் பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
-
துபாயில் கொழும்பு சாஹிரா பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல்
– ACM. சப்றி துபாய்: கொழும்பு சாஹிரா பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் வருடாந்த பொதுக் கூட்டமும் துபாயில் கடந்த 14.06.2013 அன்று செரட்டன் ஹோட்டலில் மிக விமர்சையாக இடம்பெற்றது . இந் நிகழ்ச்சியில் துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலய த்தின் கொன்சுலர் ஜெனரல் MM . அப்துல் றஹீமும் அவரது பாரியாரும் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
-
ஐ.சி.சி அரை இறுதிப்போட்டியில் மைதானத்துக்குள் நுழையும் புலிகளின் ஆதரவாளர்கள் (காணொளி)
-MJ லண்டன்: நேற்று முன்தினம் வேல்ஸ்-கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற ஐ.சி.சி.சம்பியன்ஸ் கிண்ண இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதின. இப்போட்டியின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் இரு முறை மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை இடையூறு செய்தனர். அதன் காணொளி எமது வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது.
-
ஞானஸாரர் மதுபானம் அருந்தியதை ஒப்புக் கொள்ளச் செய்த தில்காவுக்கு… கொலை அச்சுறுத்தல்!!
கொழும்பு: இவ்வார தெரணவின் 360 நிகழ்ச்சியில் பங்குபற்றிய பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானஸார தேரர் திக்குமுக்காடும் விதமாக வினாதொடுத்த்தைக் காரணம் காட்டி, ஊடகவியலாளர் தில்கா ஸமன்மலீக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய அநாமதேய அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன என தில்கா கொழும்பு பொலிஸ் குற்றப்பிரிவுக்கு மனு கொடுத்துள்ளார்.
-
சிறுநீர் அருந்தும் அமைச்சர் மேர்வின் சில்வா!
கொழும்பு: பொதுமக்கள் நல்லுறவு விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மைக்காலமாக சிறுநீர் அருந்தி வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று இன்று முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்திய ஆயுர்வேத வைத்தியர்களின் ஆலோசனைப்படி தினமும் பலதடவைகள் அவர் தனது சிறுநீரை அருந்தி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
‘பெங்களூரை தாக்கப்போகிறோம்’ என்ற கடிதத்தால் பெங்களூரில் அச்சம்!
– OIT பெங்களூர்: பெங்களூரில் உள்ள இஸ்ரோ, பி.இ.எல், பி.ச்.எல், 2 வழிபாட்டு மண்டபங்கள் மற்றும் இரண்டு 5 நட்சத்திர ஹோட்டல்கள் உள்பட 10 இடங்களை தாக்கப் போவதாக வந்துள்ள மிரட்டல் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகில் செயற்கையான குட்டித்தீவு
– MJ கொழும்பு: இலங்கையில் முதல் முறையாக பொழுதுபோக்கிற்கு செயற்கையான குட்டித்தீவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகாகவே இந்தக் குட்டித்தீவு உருவாக்கப்படவுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையின் பொறியாளர்களின் வழிகாட்டிலில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
வட இந்திய வெள்ளம்: ஐநூறுக்கு மேற்பட்டோர் பலி!
மும்பே: வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர்.
-
14வது வருட பூர்த்தியை முன்னிட்டு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
-பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 14வது வருட பூர்த்தியை முன்னிட்டு சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களை கௌரவிப்பதற்கான வைபவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜே.பி தலைமையில் நடைபெற்றது.