Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவூதியில் இலங்கையை சுற்றுலா மையமாக பிரபல்யப்படுத்த முயற்சி

    றியாத்: சவூதி அரேபியாவில் இலங்கையை ஒரு சுற்றுல்லா மையமாக பிரபல்யப்படுத்தும் முயற்சியில் றியாத்திலுள்ள இலங்கை தூதரகம் ஈடுபட்டுள்ளது என இலங்கை தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஆண்டுதோறும் 19,500 சவூதி சுற்றுலா பயணிகள் இலங்கை வருகின்றனர். இதை மூன்று வருடத்தில் இரட்டிப்பாக்க இலங்கை திட்டமிட்டுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

  • இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர்- கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்-சந்திப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் டாக்டர். முகம்மட் நபி ஹசானி போரை நேற்று (11.09.2013) தூதரக அலுவலகத்தில் சந்தித்து கல்முனை அபிவிருத்தி உள்ளிட்ட முஸ்லிம்களின் தற்போதை நிலை தொடர்பில் கலந்துரையாடுவதை படத்தில் காணலாம்.

  • வழமைக்கு மாறாக ஒருதேங்காயில் அபூர்வமான முறையில் பத்து கன்றுகள் முளைத்த சம்பவம் பூநொச்சிமுனையில்..

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பூநொச்சிமுனை முஹைதின் ஜூம்மா பள்ளிவாயல் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சீனி முஹம்மது லேனில் வசிக்கும் எம்.ஐ.ஜெஸீமா பீவியின் வீட்டு தோட்டத்தில் நாட்டிய பல தேங்காயில் ஒருதேங்காயில் வழமைக்கு மாறாக மிகவும் அதிசயமான முறையில் பத்து கன்றுகள் முழைத்துள்ளது.

  • ‘இந்த ஜனாதிபதியினையும், எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கின்றோம்…..’

    – மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இந்த ஜனாதிபதியினையும், எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும், கட்சிகளிடமும் கேட்கின்றோம். துன்பத்தால்,அழிவால், கஷ்டத்தால், பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இம்மக்களை காப்பதற்கு என்ன திட்டம் இருக்கின்றது என தெரிவிக்க முடியுமா என கேள்விழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

  • தேர்தலில் வடக்கு மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையே வெற்றியளிக்கச் செய்வார்கள் – ஜனாதிபதி

    இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: விளையாட்டுப் போட்டிகளில் விண், ஸ்பேஸ் என்கின்ற ஒரு சூத்திரம் இருக்கின்றது. இம்முறை இந்த தேர்தலில் அந்த சூத்திரம் எமக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் இந்த தேர்தலில் வடக்கு மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை

  • நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வர்த்தக மற்றும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான பயனுள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஹக்கீம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் டில்லி: இலங்கையில் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வர்த்தக மற்றும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான பயனுள்ள பேச்சுவார்த்தையொன்று இலங்கையின் நீதியமைச்சருக்கும், இந்திய வர்த்தகம் மற்றும் கைத்தொழில் மன்றத்தின்

  • புனித மக்கா செல்லும் ஹஜ்ஜாஜிகளுக்கு மெனிஞ்சைடிஸ் எனும் மூளைக் காய்ச்சல் தொற்று நோய் வராமல் தடுப்பதற்கு மெனிங்கோ கொக் வெக்ஸின் தடுப்பு ஊசி போடும் நிகழ்வு காத்தான்குடியில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக முஸ்லிம்களின் முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்மாதம் சவூதி அரேபிய புனித மக்காவுக்கு செல்லும் ஒரு தொகுதி ஹஜ்ஜாஜிகளுக்கான மெனிங்கோ கொக் வெக்ஸின் தடுப்பு ஊசி போடும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்தி

  • காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது- ஸ்தம்மிதம் அடைந்த போக்குவரத்து சேவைகள் மீன்டும் வழமைக்கு திரும்பின

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை போக்குவரத்து சபையின்  காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள்; இன்று 11-09-2013 புதன்கிழமை காலை  மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம்; முடிவுக்கு வந்ததாக காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.

  • ‘புர்கா அவெஞ்சர்’: மலாலாவின் வாழ்க்கையைத் தழுவிய கார்டூனுக்கு பாகிஸ்தானில் அமோக ஆதரவு

    – OiT இஸ்லாமாபாத்: பொதுவாக கார்ட்டூன்கள், குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதையும் தாண்டி அதன் மூலமும் பல சமூக மாற்றங்களுக்கு அடி கோள முடியும் என்பதற்கு உதாரணங்கள் பல. அந்த வகையில் சமீபத்தில் பாகிஸ்தானில் சுட்டீச்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட கார்ட்டூன் தொடரான ‘புர்கா அவெஞ்சர்’ ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் திரும்பி, விரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

  • முஸ்லீம் மாணவிகள் நீச்சல் பயிற்சி–ஜெர்மன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

    பிராங்க்பர்ட்: மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. ஜெர்மன் நகரான பிராங்க்பர்ட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள், தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது.

  • தஹெட்ட கிருல-2013′ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய அடையான அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டைக்கான நடமாடும் சேவை-காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான  ‘தஹெட்ட கிருல-2013′ தேசத்துக்கு மகுடம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில்  தேசிய அடையான அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டைக்கான நடமாடும்  சேவை 11-09-2013 இன்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

  • ‘மட்டு மாவட்ட அரச திணைக்களங்களில் அண்மைக்காலமாக சிங்கள இன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் படித்த இளைஞர், யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது’

    –  பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அண்மைக்காலமாக சிங்கள இன உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் படித்த இளைஞர், யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

←Previous Page
1 … 951 952 953 954 955 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar