Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பொதுநலவாயக் குழு யாழில் தங்கியிருந்து வடக்குத் தேர்லை கண்காணிக்கும்

    கொழும்பு: வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலை பொதுநலவாய நாடுகள் கண்காணிக்கவுள்ளது என செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா நேற்று அறிவித்துள்ளார். கென்ய முன்னாள் பிரதி ஜனாதிபதி ஸ்டீபன் கலொன்சோ தலைமையிலான நான்கு பேரைக் கொண்ட குழு 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்லை கண்காணிக்கவுள்ளது.

  • விண்வெளியில் கீரை நட நாசா திட்டம்

    நியூயோர்க்: விண்வெளி வீரர்கள் உணவுக்காக விண்வெளியில் கீரைகள் பயிரிட ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர்.

  • யாழ் தேவி நாளை முதல் கிளிநொச்சி வரை செல்லும்

    கொழும்பு: யாழ் தேவி ரயில் சேவை கிளிநொச்சி வரை நீடிக்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த 3 தசாப்தங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளினால் ரயில் போக்குவரத்துச் சேவை முற்றாக தடைப்பட்டிருந்தது.

  • டெல்லி பாலியல் வழக்கு – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

    டில்லி: டில்லியில் கடந்த டிசம்பரில் மாணவி ஒருத்தி ஆறு பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.

  • 21ம் திகதி வடக்கு மக்கள் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றனர் – அமைச்சர் பஸில் ராஜபக்ஷ

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: ஏதிர்வரும் 21ஆம் திகதி மக்கள் எடுக்கப்போகும் தீர்மானமானது மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்கும் பிரதேசங்களின் அபிவிருத்திக்கும்  ஒட்டுமொத்த கிளிநொச்சி மாவட்டத்தின் சுபீட்சத்திற்குமான தீர்மானமாக இருக்கவேண்டும் மாறாக அது மக்களை மீண்டும் இருண்டயுகத்திற்குள் தள்ளிவிடக்கூடாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

  • இன்றைய ஜூம்ஆ பிரசங்கம்-ஒலிப்பதிவு

    இடம்: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஜாமியுத் தௌஹீத் ஜும்மாப் பள்ளிவாயல். உரை: அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி அறபு மொழி விரிவுரையாளர் -அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) காலம்: 13.09.2013 வெள்ளிக்கிழமை

  • வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் கோவில்களையும், தேவாலயங்களையும், பள்ளிகளையும் உடைக்கும் வாக்குகள்- மனோ கணேசன்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பொகவந்தலாவை: வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், கோவில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் உடைத்து நொறுக்கும் மதவாதத்துக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மலையகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத சிறுபான்மை வாக்காளர்களும் மனதில்  கொள்ள வேண்டும்.

  • மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவனாக றபீக்கா காசிம் முஹம்மட் நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-04 குறிச்சி, காசிம் ஹாஜியார் லேனில் வசிக்கும் றபீக்கா காசிம் முஹம்மட்  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான  ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தேசிய தௌஹீத் ஜமாஅத் நடாத்தும் சமுதாய உணர்வுப் பொதுக்கூட்டம் இன்று

  • டென்டுல்காரின் இறுதி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானுடன் அமைய வேண்டும்: வசீம் அக்ரம்

    – MJ கராச்சி: தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் சச்சின் டெண்டுல்கர் ஆட வேண்டும். அதுவும் கொல்கத்தா ‘ஈடன் கார்டன்’ மைதானத்தில் இப்போட்டி நடைபெற வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான  வசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

  • பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் காங்கேயனோடை பிரதான வீதி சாலையோர மரம் நடுகை திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் காங்கேயனோடை பிரதான வீதி சாலையோர மரம் நடுகை திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு 13-09-2013 இன்று வெள்ளிக்கிழமை காலை காங்கேயனோடை பிரதான வீதி நுழைவாயிலில் இடம்பெற்றது.

  • முதலாவது ஹஜ் குழு இன்று மக்கா பயணம்: பிரதமர் தலைமையில் வழியனுப்பும் வைபவம்

    கொழும்பு: இந்த வருடத்திற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஹாஜிகளை ஏற்றிய முதலாவது பயணிகள் விமானம் இன்று வெள்ளிக்கிழமை (13) இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயணமாகவுள்ளது. இலங்கை ஹாஜிகள் 2240 பேருக்கு இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 949 950 951 952 953 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar