Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நிந்தவூர் அசாதாராண சூழ்நிலை: கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை சமர்ப்பிப்பு

    திருகோணமலை: நிந்தவூர் பிரதேசத்தில் தோன்றியுள்ள அசாதாராண சூழ்நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை அமர்வில் அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

  • கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் (18-11-2013) ஆற்றிய உரை

    “மண்முனைப் பற்று பிரதேச செயலாளரின் நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் பாலமுனை, காங்கேயனோடை, ஒல்லிக்குளம், கீச்சான்பள்ளம், மண்முனை, கர்பலா, ஹைறாத் நகர், பொழுதிலைக் கேணி (இது இப்பொழுது திருநூற்றுக் கேணி என்று அழைக்கப்படுகின்றது) ஆகியவை முஸ்லிம் கிராமங்கள்.

  • தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்!

    லண்டன்: லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. உலகிலேயே பிஸியான விமான நிலையங்களில் ஒன்று தான் ஹீத்ரு விமான நிலையம். பிரிட்டனை பொருத்தவரையில் கடந்த 2002ம் ஆண்டில் 7.23 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

  • சிறார் ஆபாசப் படங்கள்: முடிவு கட்டப் போகும் கூகுள் பிங் சேர்ச் என்ஜின்!

    – SHM லண்டன்: சிறார் ஆபாசப் படங்களை தேடுவோரின் கண்களுக்கு.. இனிமேல் ‘ரிசல்ட்’ கிடைக்காது. காரணம். இப்படிப்பட்ட ஆபாச தேடல்களுக்கு கூகுளும், மைக்ரோசப்ட்டின் பிங் சேர்ச் (Search Engine)  என்ஜினும் முடிவு கட்டப் போகின்றன.

  • நகரசபை நடத்தும் வாசிப்பு மாத அறிவுக் களஞ்சிய அரையிறுதிப் போட்டி

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்புரைக்கமைவாக நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்ச்சிகளில் அறிவுக்களஞ்சிய போட்டியில் அரையிறுதிக்கு தெரிவான கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா ரி.பி. ஜாயா வித்தியாலயம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற அறிவுக்களஞ்சிய போட்டி

  • பெய்ரூட்டில் இரட்டை குண்டுத் தாக்குதல்-20 பேர் பலி

    பெய்ரூட்: லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 150 பேர் அளவில் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அங்குள்ள இரானியத் தூதரகத்தின் வெளிச்சுவரும் சேதமடைந்துள்ளது.

  • மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா நேற்று திறப்பு!

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரத்தில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி பூங்கா மற்றும் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நீருற்றுப் பூங்காவும் நேற்று திங்கட்கிழமை (18) காலை திறந்து வைக்கப்பட்டன.

  • பேசும் சக்தியை இழந்தார் மண்டேலா

    – SHM கெப்டவுண்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும்,  அவர் பேசும் சக்தியை இழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனது 95வது பிறந்தநாளைக் கூட மருத்துவமனையில் தான் கொண்டாடினார் மண்டேலா.

  • நிந்தவூரில் மீண்டும் பதற்றம்

    நிந்தவூர்: நிந்தவூர் பிரதேசத்தில் கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டம் செய்த பொது மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதையடுத்து பொதுமக்கள் பொலிஸார் மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளனர். இதனால் இப் பகுதியில் தற்போது பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • ஐ.பி.எல். கிரிக்கட் போட்டிகள் இலங்கையில்?

    – SHM மும்பை: 20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த ஆண்டு இலங்கை அல்லது தென்னாப்பிரிக்காவில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகள் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இந்தியாவில் நடைபெறுவது வழக்கம்.

  • நிமோனியாவை குணப்படுத்தும் சில இயற்கை வைத்தியங்கள்

    – SHM இயற்கை வைத்தியம் என்று சொன்னால் அது வேஸ்ட் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எதையும் விரைவில் குணப்படுத்த முடியாது என்பதாலேயே தான். ஆனால் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், நோயானது உடனே குணமாகாவிட்டாலும், நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும். அதுமட்டுமின்றி,  இயற்கை வைத்தியத்தினால் எந்த ஒரு பக்க விளையும் ஏற்டாது.

  • வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு

    யாழ்ப்பாணம்: வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்பவற்றிற்காக ஆணைக் குழுவொன்றை அமைக்க இருப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 880 881 882 883 884 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar