Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அங்கோலா நாட்டில் இஸ்லாத்துக்குத் தடை: பள்ளிவாயல்களை உடைக்க உத்தரவு!

    – MJ லுஆண்டா: ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவில் பள்ளிவாயல்களை உடைக்க அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து அங்கோலா நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை என தெரிவித்திருக்கின்றது.

  • இலங்கையில் 18,777 சிறுவர் துர்நடத்தை சம்பவங்கள்

    கொழும்பு: 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் 18,777 சிறுவர் துர்நடத்தை மற்றும் துஷ்பிரயோகங்கள் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தண்டனை சட்டக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர் துஷ்பிரயோகங்கள், 9676 என்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் சம்பவங்கள் 771

  • வாக்களித்தல், வாக்கு எண்ணுவதில் புதிய யோசனைகள் முன்வைப்பு

    கொழும்பு: தேர்தலை எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்கதாக நடத்தும் வகையில் வாக்களித்தல் மற்றும் வாக்கு எண்ணும் முறைகளில் பல புதிய யோசனைகளை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்துள்ளார்.

  • கொச்சின் விமான நிலையத்தில் 56 இலங்கையர்கள் மடக்கிப்பிடிப்பு

    கொச்சின்: இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமான மார்க்கமாக தங்கம் கடத்திச் சென்ற 56 இலங்கையர் இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 28 பெண்களும், 14 ஆண்களும் அடங்குவர்.

  • சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் குடி நீர் வடிகட்டி (Water Filter) வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு பொது நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற மேலதிக வருமானங்கள் அற்ற குர்ஆன் மதரசாக்களுக்கு குடி நீர் வடிகட்டி வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சி நிரலின் கீழ் அமைப்பினது முதல்வர் இல்மி அஹமட் லெவ்வையினால் காத்தான்குடி இப்றாஹிமிய்யா மதரசாவுக்கும் அண்மையில் வடிகட்டி (Water Filter) வழங்கி வைக்கப்பட்டது.

  • இலங்கையில் முதற்தடவையாக ‘பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்’ கொள்கை வெளியீடு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன்,  முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல்’ எனும் கொள்கை வெளியீடு ஒன்று இலங்கையில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (25) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

  • வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை

    வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை. 220 கோடி மக்களின் தலைவரே நீடுழி வாழ்க!

  • மாவீரர் நினைவு நாளுக்கு அரசு தடை

    கொழும்பு: மாவீரர் தினத்தை அனுசரிக்கக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அவ்வாறு அனுசரிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அது கூறியிருக்கிறது. விடுதலைப்புலிகளைக் கொண்டாடுவதோ அல்லது அவர்களை ஊக்குவிப்பதோ தண்டமைனக்குரிய குற்றமாகும் என தேசிய பாதுகாப்புத் தகவல் நிலையம் தெரிவித்திருக்கின்றது.

  • ஜெயபாலன் நாடு கடத்தப்டுவார்!

    கொழும்பு: விசா விதி முறைகளை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளாரென குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர். 

  • புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு நேற்று 24 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியடசகர் லால் செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது.

  • புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இடமாற்றம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தற்போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும்  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரியை கடித்துக் குதறிய நபர்!

    நிக்கவரட்டிய: நீதிமன்ற பிடியாணையின் பேரில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யச்சென்ற வேளை அச்சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை பாய்ந்து கடித்துள்ளார். முகத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி நிக்கவரட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

←Previous Page
1 … 874 875 876 877 878 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar