Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மாணவர், சுற்றுலா விஸாவில் சென்று புகலிடக் கோரிக்கை

    லண்டன்: அதிகளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மாணவர் அல்லது சுற்றுலா விஸாவில் நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

  • தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு அவ்வாறான தடை இருக்குமானால், முஸ்லிம்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    கொழும்பு: இலங்கையில் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ள மின்னணு முறையிலான தேசிய அடையாள அட்டையில், முஸ்லிம் ஆண்கள் அணியும் தொப்பியும் பெண்கள் அணியும் பர்தாவும் கொண்ட புகைப்படங்கள் இருக்கமாட்டாது என்று வெளியாகியுள்ள அறிவிப்புக்கு முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • காத்தான்குடி அல்-ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல் – ஹூதா பாலர் பாடசாலையின் 21வது வருடாந்த கலை விழா 13-12-2013 நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அல்-ஹூதா பாலர் பாடசாலையின் தலைவர் எம்.சி.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.

  • சிலோன் முஸ்லிமின் பிரதம செய்தி ஆசிரியராக காத்தான்கு​டி பஹத் நியமிப்பு

    பஹத் காத்தான்குடி: கடந்த பல வருடமாக செய்தித்துறையில் அனுபவத்தை கொண்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பஹத் கடந்த 01 வருடங்களாக சிலோன் முஸ்லிமின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். தற்பொழுது சவூதி அரேபியாவில் வசித்து வரும் பஹத் இன்று (13.12.2013) முதல் பிரதம செய்தி ஆசிரியராகவும் செயற்குழு அங்கத்தவராகவும் செயற்படுவார் என குளோபல் மீடியா ஹவுஸ் அறிவிக்கிறது.

  • கல்குடாவின் குமுறல்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்குடா: பொதுத்தேர்தல் தொட்டு மாகாண சபை தேர்தல் வரை முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை வேட்பாளரும் ஜம்மிய்யத்துல் தஃவதில் குர்ஆனிய்யாவின் தலைவருமான அல்ஹாஜ் மௌலவி SHM. அஷ்ரப் அவர்கள் கலந்துகொண்டு 14-06-2013 அன்று கல்குடாவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பேசும்பேது கூறியதாவது,

  • இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்கள் தொப்பியோ,பர்தாவோ அணிந்து ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்து ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்தார்.

  • பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஓ.எம்.நஜீபின் வீட்டின் மீது தாக்குதல்!

    புத்தளம் ப்ரியன்  புத்தளம்: புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஓ.எம்.நஜீபின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளை கற்கலால் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.

  • தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கெதிராக நடவடிக்கை

    கொழும்பு: மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டும் ஒரு கைப்பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. ரத்னாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

  • இரண்டு கிலோ தங்கம் தருவதாக 100 இலட்சம் மோசடி செய்தவர் கைது

    கொழும்பு: இரண்டு கிலோ தங்கத்தை பெற்றுத் தருவதாகக் கூறி 100 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 1ம் திகதி இந்த நிதி மோசடியில் இவர் ஈடுபட்டதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

  • கிரானில் தேசிய ஆளடையாள அட்டை இடம்பெயர் சேவை

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் தேசிய ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தொடக்கம் நேற்று வியாழக்கிழமையும் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

  • ஜப்பான் நாட்டின் விஷேட துாதுவருக்கும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் தலைமையிலான பிரதி நிதிகளுக்குமிடையில் சந்திப்பு

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்  கொழும்பு: ஜப்பான் நாட்டின் விஷேட துாதுவருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதீயுதீன் தலைமையிலான பிரதி நிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை அமைச்சில் இடம் பெற்றுள்ளது.

  • இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையினால் புதிய காத்தான்குடி -03 அமீனா பள்ளிவாயலில் சிரமதானம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்வின் வழிகாட்டலில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையினால் மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வு புதிய காத்தான்குடி -03 அமீனா பள்ளிவாயலில் 13-12-2013 இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

←Previous Page
1 … 860 861 862 863 864 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar