-
மாத்தறை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ: 13,270 மைத்திரிபால சிறிசேன: 10,382
-
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ: 16,116 மைத்திரிபால சிறிசேன: 13,879
-
கேகாலை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ: 14,976 மைத்திரிபால சிறிசேன: 14,163
-
ஹம்பாந்தோட்டை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ: 10,295 மைத்திரிபால சிறிசேன: 5,820
-
பொலன்னறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன: 9,480 மஹிந்த ராஜபக்ஷ: 4,309
-
இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ: 11,864 மைத்திரிபால சிறிசேன: 9,053
-
பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் 7வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு பெட்டிகள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்கெண்ணும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
வாக்களிப்பின் பின்னரான கள நிலவரங்கள்: காத்தான்குடியில் 75 வீதம் வாக்களிப்பு!
– NFGG கொழும்பு: நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் 7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு நிறைவு பெற்றது.
-
காத்தான்குடி, ஏறாவூர், மயிலம்பாவெளி ஆகிய பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்வமாக வாக்களிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி ,ஏறாவூர்,மயிலம்பாவெளி ஆகிய பிரதேசங்களில் 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்று முடிந்தது. இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் இறுதி நேரத்திலும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை ஆர்வமாக வாக்களித்தனர்.
-
வாக்களிப்பு விபரம்: மட்டக்களப்பில் 60 வீதமான வாக்குகள் பதிவு!
கொழும்பு: இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04.00 மணியளவில் நிறைவடைந்துள்ளன. இதன்படி காலை 07.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை பதிவான வாக்குகளின் விபரம் வருமாறு,
-
பல மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன
கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பாரதூரமான வன்முறைகளோ பெரிய அசம்பாவிதங்களோ இன்றி முடிவடைந்துள்ளது.பல மாவட்டங்களில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இம்முறை வாக்குப்பதிவு உச்ச அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ரூபவாஹினியின் பிழையான செய்தியையடுத்து தேர்தல் ஆணையாளரின் அதிரடி நடவடிக்கை!
கொழும்பு: இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனம் பிழையான செய்தியை வெளியிட்டு பின்னர் அதனைத் திருத்திக்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக செய்தி ஒளிபரப்பியிருந்தது. இன்று காலை இந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.