-
ஐ.ம.சு.கூ.வின் குருநாகல் வேட்பாளர் பட்டியலில் மஹிந்த முதலிடத்தில்
குருநாகல்: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர், வேட்பாளர் பெயர் பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது.
-
வன்னியில் ரிசாத் வேட்புமனுத் தாக்கல்
மன்னார்: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
-
SLMC+NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 02
– புவி. எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் கூட்டணியாக இணைத்துக் கொண்டிருப்பதன் மூலம், முஸ்லிம் வாக்களர்களின் மனங்களில் ஒருவிதமான வெற்றிக்களிப்பு ஏற்பட்டிருப்பதை ஊடகங்கள் வாயிலாகவும், தொடர்பாடல்கள் மூலமாகவும் அறிய முடிகின்றது.
-
மீண்டும் சமையல் எரிவாயு (கேஸ்) விலை குறைப்பு
கொழும்பு: 12.5 கிலோ கிராம் கொண்ட கேஸ் (சமையல் எரிவாயு) சிலிண்டரின் விலை நாளை மறுதினம் 15ம் திகதி நள்ளிரவு முதல் நூறு ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய அந்த கொள்ளளவு கொண்ட கேஸ் சிலிண்டரின் புதிய விலை 1496 ஆகும்.
-
பொதுத்தளத்தில் நின்று வெளிப்படையாகப் பணியாற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றிணைய வேண்டும்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் பல ஊடக அமைப்புக்கள் அடிக்கடி தோற்றுவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவையெல்லாம் பொதுத்தளமொன்றில் தமக்கான களமொன்றை அமைத்துக்கொண்டு வெளிப்படையாகச் செயற்படுவதற்கு முன்வராமல் பிரதான நிர்வாகிகளின் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்,
-
விம்பிள்டன்- சாதனையைத் தவறவிட்ட ஃபெடரர்: மூன்றாவது முறையாக யாக்கோவிச் வெற்றி
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் தக்கவைத்துக் கொண்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 7-6(7-1),6-7(10-12),6-4,6-3 எனும் செட்கணக்கில் வென்றார்.
-
வடக்கு கிழக்கு முஸ்லிம் அரசியலில் பல கட்சித் தாவல்கள்
மட்டக்களப்பு: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தென்னிலங்கையில் நடக்கின்ற கட்சித் தாவல்களை இம்முறை வடக்கு கிழக்கு அரசியலிலும் அவதானிக்க முடிகின்றது.
-
எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேட்பு மனு தாக்கல்
– எம்.ரீ.எம். பாரிஸ் கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சி பொது வேட்பாளராக நாளை 13.07.2015 திங்கட்கிழமை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனவின் புதிய அரசாங்கத்தின் முன்னாள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேட்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாக பிரதியமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
-
காத்தான்குடி பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – விழிப்புடன் செயற்படுமாறு பொலீஸார் வேண்டுகோள்
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படவேண்டியது அவசியம் எனவும் காத்தான்குடி பொலீஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.பி.நிஷாந்த தெரிவித்தார்.
-
‘நல்லாட்சிக்கான ஐ.தே. முன்னணி’; புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
கொழும்பு: அடுத்த மாதம் நடக்கவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
-
அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைவு
கொழும்பு: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான செயிட் அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளார்.
-
ஊர்வலங்கள் பேரணிகளுக்கு முற்றாகத் தடை: மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: ஊர்வலங்கள் பேரணிகளுக்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.