Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த இரு மாணவர்கள் காத்தான்குடியில் கைது!

    காத்தான்குடி: கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காத்தான்குடி பொலிசார் இன்று (02) காலை கைதுசெய்துள்ளனர். மேலும் இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட 30 -1/2 பவுண் தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம், என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

  • 1989 தொடக்கம் 2010 வரை மட்டு. மாவட்ட வாக்களிப்புகளும், விகிதாசார முறையில் கிடைக்கப்பெற்ற மக்கள் பிரதிநிதித்துவங்களும்

    – புவி. எம்.ஐ. ரஹ்மதுழ்ழாஹ் 09வது நாடாளுமன்றத் தேர்தல் – 15.02.1989 த.ஐ.வி.கூட்டணி – 55,131 வாக்குகள், சுயேட்சை (ஈரோஸ்) – 46,419 வாக்குகள், ஸ்ரீ.ல.மு.கா – 36,867 வாக்குகள், ஐ.தே.கட்சி – 11,347 வாக்குகள்  பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 216,574  அளிக்கப்பட்ட வாக்குகள்: 169,284 (78.16%)

  • “எவர்கள் இந்த மாவட்டத்தில் இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்தவிரும்பகின்றாரோ,அவர்களுக்கெதிராக நாம் அச்சமின்றி குரல் கொடுப்போம்”: றிசாத் பதியுதீன்

    – மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: எவர்கள் இந்த மாவட்டத்தில் இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்தவிரும்பகின்றாரோ,அவர்களுக்கெதிராக நாம் அச்சமின்றி குரல் கொடுப்போம் என வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியில் யாணைச் சின்னத்தில் போட்டியிடும் முதலாம் இலக்க வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார். மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேதற்கண்டவாறு கூறினார்.

  • துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி!

    அநுராதபுரம்: அநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வான் ஒன்றில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் ரபேவ பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீதே குறித்த வான் மோதியுள்ளது.

  • பிரிட்டன் விமான விபத்தில் பின் லேடன் குடும்பத்தினர் பலி

    லண்டன்: பிரிட்டனில் ஹம்ஸியார் பகுதியில் விபத்துக்குள்ளன விமானத்தில் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினர் இருந்ததாக பிரிட்டனுக்கான சவுதி தூதரகம் கூறியுள்ளது. வெள்ளியன்று இந்த தனியார் விமானம் பிளக்புஸி விமானநிலையத்துக்கு அருகே விழுந்து எரிந்ததில், அதன் விமானி உட்பட அனைத்து மூன்று பயணிகளும் கொல்லப்பட்டனர்.

  • வெள்ளத்தால் கழுவப்படும் மியன்மார்

    நெய்பிடாவ்: மியான்மரில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, அந்நாட்டின் நான்கு பிரதேசங்களில் அந்நாட்டின் அதிபர் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார். இந்த வெள்ளத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, மியான்மரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • “பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்யத் தவறியவற்றை வெளியிலிருந்து நாம் செய்து காட்டியுள்ளோம்”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    காத்தான்குடி: ‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது போன சமூகக் கடமைகளை அதற்கு வெளியே இருந்து நாம் செய்து காட்டியிருக்கிறோம்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

  • “அற்ப சொற்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களே”

    தலைமன்னார்: சமூகத்தினை காட்டிக்கொடுத்து அதன் மூலம் அற்ப சொற்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களே என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன், தலைமன்னார் மக்களின் வீடமைப்பு திட்டத்தை நடை முறைபடுத்த முற்பட்ட போது அதனை பாதுகாப்பு தரப்பாரிடம் பிழையாக தகவல் கொடுத்தவர்கள் இங்கு இருப்பதாகவும் கூறினார்.

  • கல்குடாவின் மூத்த போராளிகளை சமாளிக்க திடீரென ஹெலியில் வந்திறங்கிய ஹக்கீம் (காணொளி)

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கல்குடா: அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் அமீர் அலியினது தேர்தல் நடவடிக்கைகள் கல்குடாவில் அதிகரித்து வருகின்றமை காரணமாகவும், கல்குடாவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மீதும், அதன் தலைமையின் மீதும் அதிருப்தியுடன் இருக்கும் மூத்த கஙிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்து கல்குடாவில் போட்டியிடுகின்ற றியாலின் ஆதரவினை அதிகரிக்குமாக 31.07.2015 காலை வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்

  • “மஹிந்தவின் பயணங்களுக்காக செலுத்த வேண்டிய 114 மில்லியன் ரூபாய்களை செலுத்தவும்”: ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்

    கொழும்பு: மஹிந்த ராஜபக்சவின் பயணங்களுக்காக தரவேண்டிய பாக்கியை செலுத்துமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ச, தமது பயணங்களுக்காக செலுத்த வேண்டிய 114 மில்லியன் ரூபாய்களை செலுத்துமாறு ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் கேட்டுள்ளது.இது தொடர்பில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் அஜித் டயஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயன்கோனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

  • “எமது விமர்சனங்கள் சமூக நலன் சார்ந்தவையாகும்”: அப்துர் றஹ்மான்

    – எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: எமது விமர்சனங்கள் சமூக நலன் சார்ந்தவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (31) நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற வெளிச்சம் அரசியல் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர் ஒருவரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  • கிழக்கு ஊடக சங்கத்திற்கும் ‘தாய்வீடு’ கையளிப்பு! மட்டு. அரச அதிபர் பாராட்டு!!

    மட்டக்களப்பு: தமிழ் சி.என்.என். இணையதள நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள ‘தாய் வீடு’ பத்திரிகையின் ஒரு தொகுதி, கிழக்கு ஊடக சங்கத்திற்கும் கையளிக்கப்பட்டது. கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், கல்முனையில் அமைந்துள்ள தமிழ் சி.என்.என். கிழக்கு மாகாண அலுவலகத்தில் நேற்று (31) வெள்ளிக்கிழமை அலுவலகப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வியிடமிருந்து இதனைப் பெற்றுக் கொண்டார்.

←Previous Page
1 … 367 368 369 370 371 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar