-
மட்டக்களப்பில் மடியேந்தி நின்ற மஹிந்த ராஜபக்ஷ
முஹம்மது நியாஸ் மட்டக்களப்பு: நேற்றையதினம் இராணுவ வீரர்களின் நினைவு தூபியின் நினைவுப் படிகத்தினை திறந்துவைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடி பள்ளிவாயில்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றை கவலை(?)யுடன் நினைவு கூர்ந்தார். அத்தோடு விடுதலைப்புலிகள் நாட்டில் நிலைகொண்டிருந்த காலத்தில் புலிகளால் பல்சமூகமும் பாதிக்கப்பட்ட சம்பவங்களையும் அதன் வடுக்களையும் ஞாபகப்படுத்தியதாகவே அவருடைய உரை இடம்பெற்றிருந்தது.
-
மன்னார், பள்ளிவாசல்பிட்டியில் புதிய பள்ளிவாசல் திறப்பு
மன்னார்: மன்னார் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி தாருல் ஹிகம் அல் – அஷ்ரப்பிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் திறப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர் மௌலவி எஸ். எச். எம்.ஏ (முபாரக்) தலைமையில் இடம்பெறும் இந்தத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கௌரவ விருந்தினர்களாக மாகாண அமைச்சர்
-
சிறுநீரகம் தேவை
சிறுநீரகம் பாதிப்படைந்துள்ள ஒருவருக்கு உடனடியாக வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் O +. O- பிரிவு சிறுநீரகம் தேவைப்படுகின்றது . கருணையுள்ளம் கொண்டவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு : 0715332593 0718142614
-
மகிந்தவின் மட்டு விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். அங்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்பு ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதோடு விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.
-
மக்களை பொம்மை போல நடாத்தும் ஒட்டுசுட்டான் வைத்தியர்
ஒட்டுசுட்டான்: தற்சமயம் உலகறிந்த அநாகரிகசெயற்பட்டு நபராக இருப்பவர்; ஒட்டுசுட்டான் பிரதேசவைத்தியசாலை வைத்தியர் இவர் வைத்தியசாலையில் நடந்து கொள்ளும் விதத்தால்; மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
-
மட்டக்களப்பிற்கு வரும் மகிந்தவுக்கு கைகொடுக்க இருப்பவர்கள் யாவர்?
மட்டகளப்பு: கூட்டு எதிர் கட்சியின் அடிமட்ட தயார்ப்படுத்தல்கள் மும்முரமாக இடம்பெறுகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய் கிழமை மட்டகளப்பிற்கு வருகிறார். கூட்டு எதிர் கட்சியின் முக்கிய செயற்பாட்டளர்கள் பலரும் இதன் போது கலந்துக் கொண்டுள்ளனர்.
-
கடுமையான மத நோன்பை அனுசரித்த 13 வயது சிறுமி மரணம்
ஹைதராபாத்: ஒரு கடுமையான மத உண்ணாவிரதத்தை அனுசரித்த பின்னர், இறந்து போன 13 வயது சிறுமியின் குடும்பத்தினர் மீது தென் இந்தியாவின் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் வாழ்ந்த பள்ளி மாணவி ஆராதனா மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் மட்டுமே குடித்து வந்துள்ளார். பின்னர் நிலைகுலைந்த அவர், மாரடைப்பால் இறந்து விட்டார். அவரது குடும்பம் சமண மதத்தை சேர்ந்தது. இந்த கடும் உண்ணாவிரதம் அதிஷ்டம் கிடைப்பதற்காக கடைபிடிக்கப்படும் புனித சடங்காகும்.
-
வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமா? தமிழர்களின் சம்மதமின்றி தீர்வு சாத்தியப்படுமா? இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன?
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வில் முஸ்லிம் மக்களுக்குரிய தீர்வு என்ன என்ற தெளிவான ஓர் தீர்வுத்திட்டம் இதுவரையில் எட்டப்படாமல் உள்ளது. வடக்கும், கிழக்கும் இணைக்கபட வேண்டுமா அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்ற வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில், முஸ்லிம் மக்களுக்கு எப்படியான நிலைப்பாட்டின் மூலம் அதிக நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்று விவாதிப்பதே பொருத்தமானது.
-
குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்ற மாணவன்
குருநாகல்: ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவன் அர்க்கம் நதீர் 183 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்களிடையே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். இவர் குருநாகல் தல்கஸ்பிடியைச் சேர்ந்த முஹம்மத் நதீர், உம்மு ரனீஸா தம்பதிகளின் செல்வப் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரின் ஒன்றிணைந்து எதிர்ப்போம்
பெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரியானதாகும். நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரின் ஒன்றிணைந்து எதிர்ப்போம். ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் இலங்கை ஒருங்கிணைப்பாளர் – சர்வதேச இஸ்லாமிய அறிஞர் ஒன்றியம்.
-
சிங்கள மொழி மூலம் 162 புள்ளிகளைப் பெற்று முஸ்லிம் மாணவி சித்தி
கொழும்பு: ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலம் தோற்றிய கொழும்பு-9 கைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ருகைய்யா பாரிஸ் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் மரதானை, மாளிகாகந்தையைச் சேர்ந்த மொஹமட் பாரிஸ் மற்றும் அஸ்ரா காஸிம் தம்பதிகளின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
-
சவுதி தலைமையிலான கூட்டணியின் யெமன் மீதான வான்தாக்குதலில் 140க்கும் அதிகமான பொதுமக்கள் பலி!!
சனா: சவுதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து யெமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. “கோப எரிமலை” என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , சவுதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான யெமன் மக்கள் முழக்கமிட்டனர்.