-
ஒன்றரை மணித்தியால மின்வெட்டுக்குக்கான காரணம்
கொழும்பு: இலங்கைஇலங்கை மின்சார சபையின் பிந்நிய அறிவித்தலின்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் காலையில் ஒரு மணித்தியாலமும், மாலையில் அரை மணித்தியாலமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
-
காத்த நகரை வழிநடாத்திய இரு மாமனிதர்களை கௌரவப்படுத்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக் நடவடிக்கை
– எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடியில் மாத்திரமல்லாமல் முழு கிழக்கு மாகாணத்திலும், எமது நாடு பூராகவும் பேசப்பட்ட பேசப்பட்டுக்கொண்டிருக்கும் மிகவும் உன்னதமான மனிதர்கள் எமது காத்தான்குடி பிரதேசத்தையும், எம்மையும் விட்டு பிரிந்திருக்கின்றார்கள்.
-
கௌரவக் கொலை செய்யப்பட்டாரா இளவரசி டயானா..?
லண்டன்: மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கும் இளவரசி டயானவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. மென்மையான பேச்சுக்கு சொந்தக்காரர், இளகிய மனம் கொண்டவர், கள்ளம் கபடமற்ற சிரிப்பு, பழகுவதற்கு இனிமையானவர் ஆகிய நற்பண்புகளே டயானாவின் பெயருக்கு அர்த்தம் ஆகும். ஒரு அரச குடும்பத்தின் மருமகளாக இருந்தபோதிலும், அதன் சாயலை ஒருபோதும் வெளிக்காட்டிக்கொண்டது கிடையாது.
-
தம்புளையில் மீன் மழை!
தம்புள்ளை: நான்கு மாதங்களாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர் தம்புள்ளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சனி இரவு கடுமையான மழை பெய்துள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாக தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தம்புள்ளை – சாலுவபுல்லன கிராமத்தில் நுழையும் வீதியில் கிட்டத்தட்ட 100 சிறிய மீன்கள் வானில் இருந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் பலி!
கொழும்பு: பிரபல சிங்கள நடிகை கவீஷா அயேஷானி வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நுகேகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுள்ள செல்லப்பட்டுள்ளதாக மீரிஹான போக்குவரத்து பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அடுத்த பிரதமராக மஹிந்த!
கொழும்பு: இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பெயரிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இனவாதிகளின் முகவர் நிலையமா, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி?
அக்/ அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை)யில் உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக சேர்க்கப்பட்ட A H. அப்துழ்ழாஹ் என்னும் மாணவர் ஒருவர் முகத்தில் தாடி வைத்திருந்தார் என்ற காரணத்தினால் குறித்த பாடசாலையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.‘மாணவர்கள் தாடி வைத்திருப்பது ஒழுக்கக்கோவைக்கு முரணானது’ என்றும் ‘அதற்கான ஒழுக்காற்று நடவடிக்கையாகவே இவ்வாறு பாடசாலையில் இருந்தும் இம்மாணவர் நீக்கப்பட்டதாகவும்’ இப்பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற முஸ்லிம் அதிபரும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
-
மகா நடிகன் மஹிந்த: பலியாவார்களா முஸ்லிம்கள் ?
இனவாதத்தை நம்பி அரசியல் அநாதையானவர்களுக்கு சிறந்த உதாரணம்தான் மஹிந்த ராஜபக்ஸ.சிறுபான்மை இன மக்களை ஒதுக்கி தனிச் சிங்கள வாக்குகளால் தனது அரசியல் வாழ்வை நிலை நிறுத்துவதற்காக எடுத்த முயற்சியில் படுதோல்வியடைந்து இப்போது துவண்டு போய்க் கிடக்கின்றார் அவர்.
-
உம்றாவுக்குச் செல்கிறார் முகமட் றிபாஸ்
காத்தான்குடி: மர்ஹூம் ஷெய்ஹுல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிவிடை செய்த, வெல்லம்பிட்டியை சேர்ந்த அல்ஹாபிழ் மௌலவி நாசர் முஹம்மட் றிபாஸை கௌரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனினால் இலவசமாக உம்றா பயணத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.
-
மண்ணறைவாசிகளின் எதிர்பார்ப்புகள் (வீடியோ)
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம் : மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா நாள் : 07.10.2016 (வெள்ளி க்கிழமை) (சுவனப்பாதை)
-
கட்டாரில் -ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) தொடர்பான இரங்கல் கூட்டம்
– அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) கட்டார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் அமைப்பின் ஏற்பாட்டில் மர்ஹூம் உஸ்தாதுனா ஷெய்குல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்கள் தொடர்பான இரங்கல் கூட்டம் 14-10-2016 வெள்ளிக்கிழமை கட்டார் சல்வா வீதியில் அமைந்துள்ள கோலிட்டி ஹைபர் மார்க்கட் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
-
பல்லாயிரக்கணக்கான மக்கள் கதறியழ அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் ஜனாஸா நல்லடக்கம்!
காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், புறக்கோட்டை ‘சம்மான்கொட்’ பள்ளிவாயலின் ஆயுட்காலத் தலைவரும், காத்தான்குடி மக்களின் கண்ணியத்துக்குரியவராகவும் இருந்த அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் ஜனாஸா, இன்று காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்க இரங்கல் நிகழ்வுக்கு அகில இலங்கையிலிருந்து, மார்க்க அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.