Category: Your Kattankudy
-
17 வருடங்களின் பின் லொறியினுள் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு: கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு!
கொழும்பு: கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருந்த லொறியொன்றுக்குள்ளிருந்து 17 வருடங்களின் பின் மீண்டும் அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. எல். ரி. ரி. ஈ.யினரால் மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் நிறையுடைய டி. என். டி. ரக வெடிபொருட்களே தற்போது கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
-
சகல தேர்தல்களையும் ஜனநாயகத்துடனே நடத்துகிறோம்: எதிர்க்கட்சி தோல்வியடைவதற்கு நாம் பொறுப்பல்ல! – ஜனாதிபதி
பூண்டுலோயா: தேர்தல்களை நாம் ஜனநாயக ரீதியிலே நடத்தி வருகிறோம். எதிர்க் கட்சியால் தேர்தல்களில் வெற்றிபெற முடியாமைக்கு நாம் பொறுப்பல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயகம் பற்றிப் பேசும் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை வட மாகாணத்தில் மூன்று அல்லது நான்காவது இடத்துக்காவது வருமா என்பதும் சந்தேகமே என குறிப்பிட்ட ஜனாதிபதி மக்களுக்கு சேவை செய்வோரையே மக்கள் ஆதரிப்பர் என தெரிவித்தார்.
-
பொதுநலவாயக் குழு யாழில் தங்கியிருந்து வடக்குத் தேர்லை கண்காணிக்கும்
கொழும்பு: வடக்கில் நடைபெறவுள்ள தேர்தலை பொதுநலவாய நாடுகள் கண்காணிக்கவுள்ளது என செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா நேற்று அறிவித்துள்ளார். கென்ய முன்னாள் பிரதி ஜனாதிபதி ஸ்டீபன் கலொன்சோ தலைமையிலான நான்கு பேரைக் கொண்ட குழு 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்லை கண்காணிக்கவுள்ளது.
-
விண்வெளியில் கீரை நட நாசா திட்டம்
நியூயோர்க்: விண்வெளி வீரர்கள் உணவுக்காக விண்வெளியில் கீரைகள் பயிரிட ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடம் அமைத்து வருகின்றனர். அதில் பணிபுரிய பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர்.
-
யாழ் தேவி நாளை முதல் கிளிநொச்சி வரை செல்லும்
கொழும்பு: யாழ் தேவி ரயில் சேவை கிளிநொச்சி வரை நீடிக்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த 3 தசாப்தங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளினால் ரயில் போக்குவரத்துச் சேவை முற்றாக தடைப்பட்டிருந்தது.
-
டெல்லி பாலியல் வழக்கு – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
டில்லி: டில்லியில் கடந்த டிசம்பரில் மாணவி ஒருத்தி ஆறு பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
-
21ம் திகதி வடக்கு மக்கள் தமது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றனர் – அமைச்சர் பஸில் ராஜபக்ஷ
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: ஏதிர்வரும் 21ஆம் திகதி மக்கள் எடுக்கப்போகும் தீர்மானமானது மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்கும் பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் ஒட்டுமொத்த கிளிநொச்சி மாவட்டத்தின் சுபீட்சத்திற்குமான தீர்மானமாக இருக்கவேண்டும் மாறாக அது மக்களை மீண்டும் இருண்டயுகத்திற்குள் தள்ளிவிடக்கூடாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
-
இன்றைய ஜூம்ஆ பிரசங்கம்-ஒலிப்பதிவு
இடம்: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர் ஜாமியுத் தௌஹீத் ஜும்மாப் பள்ளிவாயல். உரை: அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி அறபு மொழி விரிவுரையாளர் -அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) காலம்: 13.09.2013 வெள்ளிக்கிழமை
-
வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் கோவில்களையும், தேவாலயங்களையும், பள்ளிகளையும் உடைக்கும் வாக்குகள்- மனோ கணேசன்
– பழுலுல்லாஹ் பர்ஹான் பொகவந்தலாவை: வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், கோவில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் உடைத்து நொறுக்கும் மதவாதத்துக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மலையகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத சிறுபான்மை வாக்காளர்களும் மனதில் கொள்ள வேண்டும்.
-
மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவனாக றபீக்கா காசிம் முஹம்மட் நியமனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-04 குறிச்சி, காசிம் ஹாஜியார் லேனில் வசிக்கும் றபீக்கா காசிம் முஹம்மட் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டென்டுல்காரின் இறுதி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானுடன் அமைய வேண்டும்: வசீம் அக்ரம்
– MJ கராச்சி: தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் சச்சின் டெண்டுல்கர் ஆட வேண்டும். அதுவும் கொல்கத்தா ‘ஈடன் கார்டன்’ மைதானத்தில் இப்போட்டி நடைபெற வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான வசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார்.