Category: Your Kattankudy
-
மர்ஹூம் அஷ் ஷஹீத் அல்ஹாஜ் ஏ அகமட் லெவ்வை அவர்களின் பெயர்பப்பலகைக்கு வர்ணம் பூசுதல்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: சமூக அமைப்புக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மர்ஹூம் அஷ் ஷஹீத் அல்ஹாஜ் ஏ அகமட் லெவ்வை அவர்களின் பெயர்பப்பலகை வர்ணம் பூசப்படுவதை படத்தில் காணலாம்.
-
காத்தான்குடியில் மகளிர் தின நிகழ்வு
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றை வளர்க்க கற்றுக்கொடுங்கள் இவ்வாறு காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தினத்தையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் அஷ் ஷே-ஹ் ஏ அப்பாஸ் நளீமி தெரிவித்தார்.
-
மர்ஹூம் நெய்னா மரைக்காரின் சேவையினை நினைவு கூறும்வகையில் ஞாபகார்த்த முத்திரை
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் புத்தளம்: புத்தளத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதி திட்டமிடல் அமைச்சருமான மர்ஹூம் நெய்னா மரைக்காரின் சேவையினை நினைவு கூறும்வகையில் ஞாபகார்த்த முத்திரை மற்றும் முதல் நாள் தபால் உறை என்பனவற்றினை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர், பிரபல சமூக சேவையாளர் அல்-ஹாஜ் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.ஏ. ஹலீம் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் வரலாற்றில் எந்தக் கட்சிக்காரர்களையும் அச்சுறுத்தியது கிடையாது: வீ. ஜயதிலக
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வன்னி: அமைச்சர் றிசாத் பதியுதீனின் அரசியல் வரலாற்றில் எந்தக்கட்சிக்காரர்களையும் அச்சுறுத்தியது கிடையாது என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் வீ. ஜயதிலக, மக்களுக்கு அமைச்சர் ஆற்றிவரும் சேவையினால் இன்று மக்கள் அவர் பக்கம் நிற்கின்றனர். ஆனால் சில அரசியல்வாதிகள் தமது வங்குரோத்து அரசியலை மறைக்க பொய் கூறுவதாகவும் கூறினார்.
-
வங்கதேச அணியிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து வெளியேற்றம்: இலங்கை அணியும் தகுதி
அடிலெய்ட்: அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியிடம் தோற்ற இங்கிலாந்து அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.
-
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறத் தடை
கொழும்பு: இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி நீதிமன்றம் ஒன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
கிழக்கு மாகாண கல்வியமைச்சருக்கு கிழக்கு ஊடக சங்கம் வாழ்த்து
EMS அரசியல் ஆதிக்க ஊடறுப்புக்களால் கல்வித்துறை சார் நிர்வாக சேவையிலுள்ள அதிகாரிகளும், ஆசிரிய மாணவ சமூகத்தினரும், பெற்றோரும், பாடசாலை நலன்விரும்பிகளும் பல்வேறு வகையான ஏமாற்றங்களையும், அசௌகரியங்களையும் தாங்கியவர்களாக இருப்பதை மறுக்க முடியாது.
-
“ராஜபக்ஸ குடும்பத்தில் ஏன் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை?”
கொழும்பு: மஹிந்த ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் இதுவரையில் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது தொடர்பில் காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாது.
-
“இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்னார் பிரதேசத்துக்கும் விஜயம் மேற்கொள்வார்”: அமைச்சர் றிஷாட்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் கிராமத்துக்கு வருகைத்தரவுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
காலிறுதிக்கு முன்னேற மேற்கிந்தியா, அயர்லாந்து, பாக். போட்டி: கள நிலவரம்
மெல்போன்: உலகக் கிண்ணத்தில் பி பிரிவில் காலிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான், அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தென்னாபிரிக்காவுடனான கடந்த சனிக்கிழமை போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதுடன் அந்த அணி நிகர ஓட்ட விகிதம் சிக்கலின்றி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டுள்ளது.
-
இலண்டனில் இலங்கை அரசியல்வாதிகளின் இரகசிய சொத்துக்கள்!!
கொழும்பு: இலங்கை அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை கண்டறியவதற்காக இலண்டனிலுள்ள மோசடிகளை கண்டறியும் அலுவலகத்தின் உதவியை நாடியிருப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.
-
ஆயுத இறக்குமதியில் சவுதி அரேபியா முதலிடத்தில்!
லண்டன்: சவுதி அரேபியா தான் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடு என்று நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பான உலகளாவிய புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது. இதுவரை முதல் இடத்தில் இருந்துவந்த இந்தியாவையும் சவுதி அரேபியா இந்த விடயத்தில் முந்தியுள்ளது.