Category: Your Kattankudy
-
இப்பாகமுவையில் தறாவீஹ் தொழுகைக்குச் சென்றவர்கள் மீது வால் வெட்டு
இப்பாமுகவ: பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் இனந்தெரியாதவர்களின் வால்வெட்டுக்கு உட்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
“ஒரே நாளில் 5 முறை என்னை வல்லுறவுக்கு உட்படுத்தினர்: ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து தப்பிவந்த யுவதிகள் வாக்குமூலம்
பக்தாத்: தாங்கள் ஒரு நாளில் ஐந்து முறை வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் பிடியிலிருந்து தப்பிவந்த யஸீதி மதச் சிறுபான்மையினர் தெரிவித்துள்ளனர்.
-
மைத்திரியின் அனுமதியின்றி கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நடத்தத் தடை
கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவின் கூட்டம் நடத்துவதைத் தடைசெய்யும் உத்தரவொன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிறப்பித்துள்ளது.
-
“தேர்தல் நடவடிக்கைக் குழு தலைவராக மகிந்த நியமனம்”
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகள் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது இந்த தீர்மானமெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
-
‘ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் வரலாற்றில் கருப்பு நாள்’: இஸ்ரேல் குமுரல்!!
AF-90 ஜெருசலம்: அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது வரலாற்றில் கருப்பு நாள் என்று குமுறி வருகிறது இஸ்ரேல்.ஈரான் அணு குண்டு தயாரிக்கத்தான் அணுசக்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இஸ்ரேல் முதலில் புகார் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளும் ஈரான் மீது குற்றம்சாட்டின. ஆனால் அதை அந்நாடு மறுத்தது.
-
“அச்ச சூழ்நிலையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் தேவை உணரப்பட்டதை செயற்படுத்தும் காலம் வந்துவிட்டது”:முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு: முஸ்லிம்களுக்கு கடந்த மூன்று வருங்களாக இலங்கையில் இருந்த அச்ச சூழ்நிலைகளின்போது முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியம் உணரப்பட்டது. அன்று உணரப்பட்டதை இன்று செயற்படுத்தும் காலம் வந்துவிட்டது என கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் மத்திய கொழும்பு ஐ.தே.க. பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
மஹிந்தவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்!
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்களுக்கு தலைமை வகிப்பதற்காக அங்கீகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
-
“முஸ்லிம்கள் திட்டமிட்டு மஹிந்தவை தோற்கடித்தனர்”
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வாக்குகள் திட்டமிட்டு பக்கசார்பாக அளிக்கபட்டமையினால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்பட்டார் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியகலாநிதி வசந்த பண்டார தெரித்தார்.
-
சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பினால் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பினால் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
“மைத்திரியின் இடத்திற்கு சிறந்த தலைவர் ஒருவர் அவசியம்”: திஸ்ஸ அத்தநாயக்க
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் வைத்துள்ள இறுக்கமான உறவு நேற்று அவரால் நிகழ்த்தப்பட்ட உரையின் மூலம் தெளிவாகியுள்ளதாக டாலி வீதியில் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களினது கூட்டத்திற்கு வருகைதந்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
-
“மைத்திரியின் பேச்சுக்கு 17ஆந் திகதி பதில்”: மஹிந்த
– எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களினது கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகைதந்த வேளையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆற்றிய உரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியபோது ‘ஆகஸ்ட் மாதம் 17ஆந் திகதி அதற்கு பதில் தருகிறேன் ‘ எனத் தெரிவித்தார்.
-
முஜிபுர் ரஹ்மானின் முதலாவது பிரச்சார கூட்டம் நாளை
கொழும்பு: மத்திய கொழும்பின் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ‘மாற்றத்திற்கான அத்திவாரம் மாத்திரமே எனும் தொனிப்பொருளில்’ நாளை 16 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 3 மணிக்கு மருதானை சுதுவெல்லையில் இடம்பெறவுள்ளது.