Category: Your Kattankudy
-
FCID எனப்படும் நிதி குற்றப் புலனாய்வு திணைக்களம் நீக்கப்பட்டு நிதி மற்றும் பொருளாதார புலனாய்வு அமைப்பு அறிமுகம்!
கொழும்பு: நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட FCID எனப்படும் நிதி குற்றப் புலனாய்வு திணைக்களம் விரைவில் நீக்கப்படவுள்ளதாக, திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ராஜபக்ச ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிதி குற்றப் புலனாய்வு திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது.
-
இலங்கையில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா கவலை
வோஷிங்டன்: இலங்கையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சில கவலைகள் உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது. அங்கு தொடர்ந்தும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இலங்கையில் முதலீடு செய்ய சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் இணக்கம்
ஊடகப் பிரிவு ஜித்தா: சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச மட்ட உயர் அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
கார்ட்டூன் விபரீதம்: பறக்க நினைத்து 43வது மாடியில் இருந்து குதித்த 6 வயது சிறுமி பலி!
SHM ஒசாகா: கார்ட்டூன் படத்தைப் பார்த்து அதில் வருபவர்களைப் போல் தானும் பறக்க நினைத்து, 6 வயது சிறுமி ஒருவர் 43வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் ஜப்பானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது ஒசாகா நகர். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 43வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் 6 வயது சிறுமி. சம்பவத்தன்று அந்த சிறுமி குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
-
சவுதி ‘முதவ்வா’ அதிகாரிகளுக்கு புதிய சட்டம் அறிமுகம்
AF-90 றியாத்: சவுதி அரேபியாவில் மதத்துறைக்கு பொறுப்பான ‘முதவ்வா’ பிரிவினரின் அதிகாரங்களை கட்டுப்படுத்த புதிய ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. முதவ்வாக்கள் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என அண்மைய ஆண்டுகளில் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
-
உற்பத்தித் திறண் போட்டியில் நான்காம் இடத்தினைப் பெற்ற காத்தான்குடி பிரதேச செயலகம்
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: அகில இலங்கை ரீதியில் பிரதேச செயலகங்களுக்கிடையில் இடம்பெற்ற உற்பத்தித் திறண் போட்டியில் நான்காம் இடத்தினைப் பெற்று காத்தான்குடி பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதையிட்டு விருது வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ். எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
-
பள்ளிவாசல்களில் ஜேர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை
பேர்லின்: ஜேர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜேர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார்.அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார்.
-
முடிச்சிடப்பட்ட கைறுகளுக்கு முன்னால் நிற்கும் மாணவர்களுக்கு பதில் கூறுமா அரசு?
நிரோஸா இஸ்ஸதீன் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாக்கிற்கமைவாக இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தியிலும் சமூக வளர்ச்சியிலும் பாரிய பங்களிப்பு செய்யும் அம்சமாக கல்வியும் அதனோடு இணைந்ததான அரச பதவிகளும் காணப்படுகின்றன. அந்த வகையில் இலங்கையில் உயர் கல்வியையும் பயிற்சியையும் அதன் நிறைவாக அரச ஆசிரிய நியமனங்களையும் வழங்கும் நிறுவனங்களாக தேசிய கல்வியியற் கல்லூரிகள் மிளிர்கின்றன.
-
பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் காத்தான்குடி கடற்கரை வீதியும் -பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் பால்வத்தோடையும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதி கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும் ,குழியுமாக காணப்படுவதோடு மட்டுமன்றி மக்கள் பாவனைக்கு பொருத்தமற்ற நிலையிலும் காணப்பட்டு வருவதாக அவ் வீதியை அன்றாடம் பயன்படுத்தும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளிரூட்டும் பொக்கிஸங்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் அதிக வெப்ப மற்றும் உஷ்ன நிலைமை காரணமாக பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அங்காடி வியாபாரிகள் ,மீனவர்கள் என பல தரப்பினர் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
-
பனாமா ஆவணக் கசிவு: மத்திய வங்கியும் விசாரணை
கொழும்பு: பனாமாவின் மொசாக் பொன்செக்க நிறுவனத்திலிருந்து கசிந்த ஆவணங்களில் இருப்பதாகக் கூறப்படும் இலங்கையர்களின் பெயர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்துப்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.