Author: yourkattankudy.com
-
138 வருட கால டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக பகல்-இரவு ஆட்டம் அறிமுகம்!
– SHM அடிலைட்: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. அவுஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே அடிலைட் ஓவல் மைதானத்தில் இப்போட்டி நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.138 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பகல்-இரவு ஆட்டமாக ஒரு போட்டி நடைபெறுவது இதுதான் முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் அரை மொட்டைத்தலையுடன் படம் பிரசுரித்த வங்கப் பத்திரிகை!
– AF-90 டாக்கா: வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை இழந்ததற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தலையை பாதி மொட்டியடித்து கிராபிக்ஸ் படங்களை வெளியிட்டுள்ளது வங்கதேச பத்திரிகையொன்று. இந்த செயல், இந்திய ரசிகர்களை கடுமையாக கொதிப்படைய செய்துள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடியது.
-
ஆப்கானிஸ்தானில் இராஜாங்க அலுவலகங்கள் அருகே குண்டுவெடிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் வெளிநாட்டு இராஜாங்க அலுவலகங்கள் நிறைந்த பிரதேசத்தில் நடந்த பெரிய குண்டுவெடிப்பு அங்கிருந்த கட்டிடங்களை பெருமளவு ஆட்டம் காணச்செய்திருக்கிறது.
-
ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் போட்டியிடுகிறார் மகிந்த?
கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலேயே மஹிந்த இவ்வாறு ஸ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கவுள்ளார்.
-
“அதிகாரம், பணபலமுள்ள போதே தோல்வியடைந்த மஹிந்த இனி வெல்லவே முடியாது”
கொழும்பு: இலங்கை அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்துவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. அரச வளங்கள், பெருந்தொகையான பணம், இராணுவத்தினரைக் கையில் வைத்துக்கொண்டு நடத்திய தேர்தலில் தோல்விகண்ட அவரால், மீண்டுமொரு தேர்தலில் வெற்றிபெற முடியாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
-
“நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு பஸீர் சேகுதாவூதிற்கு கட்சித் தலைமை இடமளிக்கக் கூடாது”
மட்டக்களப்பு: நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு பஸீர் சேகுதாவூதிற்கு கட்சித் தலைமை இடமளிக்கக் கூடாது என மட்டக்களப்பு மாநகர சபை முன்னால் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
‘பொதுஜன பெரமுன’ எனும் பெயரில் பொதுபலசேனா தேர்தலில் போட்டியிடுகிறது
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் கடும்போக்கு பௌத்த அமைப்பாக கருதப்படும் பொதுபல சேனா போட்டியிடவுள்ளது. இது குறித்த முடிவை தமது அமைப்பு எடுத்துள்ளது என்றும், யாருடனும் இணைந்து போட்டியிடாமல் தனித்தே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
-
அபுதாபியில் அமெரிக்க ஆசிரியையை கொலைசெய்த பெண்ணுக்கு மரண தண்டனை
அபுதாபி: அபுதாபியில் அமெரிக்க ஆசிரியை ஒருவரை கொலைசெய்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
-
‘கிளி மகாராஜா’வின் தொலைகாட்சியில் மீண்டும் வில்பத்து விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது
– அபூ அஸ்ஜத் கொழும்பு: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முன்னால் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தமக்கு எதுவும் தெரியாது என்று கிளிப் பிள்ளை பேச்சினை நேற்று களி மகாராஜாவின் தொலைக்காட்சியில் கூறியது மட்டுமல்லாது கிளி மகாராஜாவின் படையணியினர் விமானத்தில் வில்பத்து மீது பரந்து திரிந்துவிட்டு அதிலிருந்த ஊடகவியாளால பெண்மணி வெறிபிடித்தவர் போல் வில்பத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழிக்கின்றார் என்று குரல் கொடுத்த காட்சியினையினையும் எம்மால் காணமுடிகின்றது.
-
“மஹிந்த வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடுவார்”!
கொழும்பு: எதிர்வரும் பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலைச் சின்னத்தில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயமாகும் என்று ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
-
“நாம் அடைந்திருக்கின்ற கல்வி மட்டங்களும் சமூக வளங்களும் போதுமானதல்ல”: ஷிப்லி பாறூக்
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தன்குடி: நாம் அடைந்திருக்கின்ற கல்வி மட்டங்களும் பொருளாதார வளங்களும் நிச்சயமாகப் போதுமானதல்ல. ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றபோது ஒரு சிலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை விடுத்து அவர்களுள் ஐம்பது வீதத்தினரையாவது பல அரசாங்க மற்றும் தனியார் திட்டங்களினூடாக தலைசிறந்த வைத்தியர்களாக
-
மகிந்தவின் மறக்க முடியாத மூவரும் ரிசாதின் உரிமைப் போராட்டமும்
– ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் இன்றைய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் ரீதியான எதிரும்புதிருமான கருத்துக்கள் தற்போது தேர்தல் களத்தை சூடாக்கிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிள்ளையார் சூழி போட்டு இன்றைய அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார்.