-
“அவர் வரமாட்டார்”
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி A.J. அப்துர் ரஊப் (மிஸ்பாஹி), கடந்த வாரம் காணொளி மூலமாக தனது எல்லாம் அவனே கொள்ளையைச் சரிகாண்பதற்கு உலமாக்களை பொதுவாக அழைத்திருந்தார். 1979 இல் இருந்து இன்றுவரை சுமார் 40 வருடங்களாக காத்தான்குடியில் எல்லாம் அவனே எனும் கொள்கையை நிலைநாட்டி இன்றுவரை பகிரங்கமாக மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி செயற்படுத்தியும் வருகின்றார்.
-
காத்தான்குடி மாணவன் அப்துல்லாஹ் நீரில் மூழ்கி மரணம்
காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல்லாஹ் (17) எனும் மாணவன் இன்று (25) பிற்பகல் படுவான்கரை பிரதேச வயல்வெளி நீரோடையில் குளிக்ச்சென்ற போது அங்கு வெட்டப்பட்டிருந்த குழியில் மூழ்கி மரணமடைந்துள்ளார். “இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்”.
-
இன்று கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் நடக்கவிருக்கும் நுஸ்ரான் பின்னூரியின் குழப்பத்தைத்தவிர்ப்போம் -கல்குடா முஸ்லிம் வைத்தியர்கள் சங்கம்
– எம்.ரீ.எம்.பாரிஸ் இன்று வெள்ளிக்கிழமை (25.01.2019) வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயல், ஓட்டமாவடி அக்பர் பள்ளிவாயல், மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாயல்களில் (நுஸ்ரான் பின்நூரி) என்பவரைக்கொண்டு ஜும்ஆ குத்பா உள்ளிட்ட பயான் நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
-
கடந்த 9 மாதங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 40,000 மில்லியன் ரூபா நஷ்டம்
கடந்த 9 மாதங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 40,000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பி.யின் எம்.பியுமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு 32,357 மில்லியனையும் 2015 இல் 16,000 மில்லியனையும் 2016 இல் 12, ஆயிரம் மில்லியன் நஷ்டத்தையும் எதிர்கொண்டது.
-
கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள கருத்துக்களே அவர்களுக்கு ஹிஸ்புல்லா மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது. எனவே ஹிஸ்புல்லா என்ற தனிநபரையே தாம் எதிர்ப்பதோடு, அரசியல் கட்சி சாராத ஒருவரே கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் “மஹிந்த” நிகழ்வு !
இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இஸ்லாமிய கல்வி நிலையம்மற்றும் கொழும்பு-03இல் உள்ள கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை ஆகியனஇணைந்துஇந்ததிறந்த பள்ளிவாசல் நிகழ்வைஏற்பாடு செய்திருந்தது.
-
ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானம்
இலங்கைக்கு இதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல விண்ணப்பித்திருந்தும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையை கருத்திற்கொண்டு இரண்டு வார காலமே முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் பொறுப்பேற்றவுடன் உடனடியாக சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் “அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித்” அவர்களுடனும் முஸ்லிம் சமய கலாசார ஆலோசகர் ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமி செயலாளர் “கலாநிதி…
-
“பிங்கர்பிரிண்ட் லொக்” அப்டேட்டுடன் வெளியாகும் புதிய வட்ஸ்அப்
நிவ்யோர்க்: உங்கள் நண்பர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து உங்களின் வாட்ஸ் ஆப் சட்களை பாதுகாக்க விரும்பும் நபர்களுக்காகவே வட்ஸ் ஆப் நிறுவனம் இந்த பிங்கர்பிரிண்ட் லொக் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த 2.19.3 அப்டேட்டில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படுமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
“போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளன”- ஜனாதிபதி மைத்திரிபால
முல்லைத்தீவு: போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – முள்ளியாவளை பகுதியில் (21) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
-
“தேசியத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கே வெற்றி கிட்டும்” – பிரிட்டிஷ் அமைப்பு
பிரிட்டனின் பல்தேசிய ஊடகக் கம்பனியான ‘ த எக்கனோமிஸ்ற் குரூப்‘பின் ஒரு அங்கமாக இயங்கும் ‘ எக்கனோமிஸ்ற் இன்ரெலிஜென்ஸ் யூனிற்‘ உலக விவகாரங்களையும் சர்வதேச வர்த்தக நிலைவரங்களையும் கிரமமாக ஆய்வுசெய்து எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றை முன்கணிப்புச்செய்யும் சேவைகளையும் ஆலோசனைசேவைகளையும் வழங்கிவரும் ஒரு பிரபலமான அமைப்பாகும்.
-
“இலங்கை கிரிக்கட் குழுவில் வீரர்களைச் சேர்த்துக்கொள்வதற்கு இலஞ்சம் வழங்கப்படுகிறது”
இலங்கை கிரிக்கெட் குழுவில் விளையாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி பலர் தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார். இதேவேளை தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்த சந்தர்ப்பம் தொடர்பில் தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கு எதிரான பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷலிடம் கடந்த புதன்கிழமை (16) முறைப்பாடு செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.