WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தனியார் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் அவசர கூட்டம்

    – அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை: கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலான அவசர கலந்துரையாடல் ஒன்று, இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபையின் முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.வாஹித் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்களும்…

  • இன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது

    இலங்கையில் இன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என போலீஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கோட்டை ரயில் நிலையம் மற்றும் நாவல உள்ளிட்ட பகுதிகளின் மீது இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. 

  • சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்

    தற்போதய அமைதியற்ற சூழலை கருத்திற்கொண்டு, இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள், செயலிகள் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய, சமூக வலைத்தளங்கள் மூலம் போலியானதும், தேவையற்ற தகவல்கள் பரவுவதன் மூலம் எழும் பிரச்சினைகளை தடுக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • சிலாபத்தில் நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு!

    சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பகுயில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையினை கட்டுப்படுத்தவே இந்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது

  • ஜூம்ஆ உரைகளின் ஒலிப்பதிவுகளை அமைச்சுக்கு அனுப்புமாறு வலியுறுத்தல்

    மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் மற்றும் ஏனைய உரைகளையும் ஒலிப்பதிவு செய்து அவற்றை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

  • “மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவர வேண்டும்”

    அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகமாகும். அதனால் அதனை முற்றாக ஒழிக்கும் பொறுப்பு முஸ்லிம் மக்களுக்கு இருக்கின்றது. அத்துடன் பிரிவேனா கல்வியைப்போன்று மத்ரஸா கல்வியையும் கல்வி அமைச்சுக்கு கீழ் கொண்டுவரவேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடிசில்வா தெரிவித்தார்.

  • தற்கொலை குண்டுதாரி ஆஸாத்தின் அந்த இறுதி மணித்தியாலங்கள்

  • “ஞானசார தேரரை விடுவிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்”

    கொழும்பு: எதிர்வரும் வெசாக் பண்டிகையின்போது பொதுபலசேனா அமைப்பின பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த பொதுபலசேனா, அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணத்திரட்டி வீதி போராட்டத்தை முன்னெக்கப்போவதாக பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.

  • கல்முனையில் மாலை 5.00 மணிக்குப் பின்னர் டியூஷனுக்குத் தடை

    அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை: தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து பிரத்தியேக வகுப்புகளும் (டியூஷன்) மாலை 5.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.

  • அன்பான வாசகர்களுக்கு, எமது சங்கைமிக்க ரமழான் வாழ்த்துக்கள்

    உலகின் பெரும்பாலான பகுதிகளில் சங்கைமிக்க ரமழான் ஆரம்பமாகிவிட்டது. நல்லமல்களின் பக்கம் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் ரமழான் பிறை தென்படவில்லை. அப்பிரதேசங்களிலும் ரமழானை வரவேற்க அதிக ஆர்வத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர். அல் குர்ஆன் இறக்கப்பட்ட இந்த மாதம் ஓர் சங்கைமிக்க மாதமாகும்.

  • வாழ்வின் சகல அமசங்களிலும் மனிதனை புனிதனாக்கும் மகத்தான ரமழான் !

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்  ஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், ‘மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகிறது. இதன் பகழ்ப் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும்.

  • சஹ்ரான் காசிமின் இரு குழுக்கள்..?

    AK-11 காத்தான்குடி: கடந்த மாதம் 21ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் காசிம் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் தற்கொலை குண்டுதாரியும் ஐ.எஸ். இயக்கத்தின் இலங்கைக்கான ‘தூதுவரு’மான சஹ்ரான் காசிமிடம் இரு குழுக்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

←Previous Page
1 … 71 72 73 74 75 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar