WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “ரிஷாத் , அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலகியமை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தராது”

    அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான   அசாத்சாலி,  ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகியமை பிரச்சினைகளுக்கு  தீர்வை பெற்றுத்தராது என  பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்   கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்தார். ஏப்ரல் 21ம் திகதி  அடிப்படைவாதிகளினால்  நடத்தப்பட்ட  தாக்குதலை தொடர்ந்து   இனங்களுக்கிடையிலான  தேசிய  நல்லிணக்கமே  சீர்குலைந்துள்ளது.

  • முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமால் வியாளேந்திரன் அடைந்த நண்மை என்ன ? இதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்களா ?  

    – முகம்மத் இக்பால்  சாய்ந்தமருது  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாலேந்திரனின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் கவலை தருகின்றது. ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமை உணர்வினை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் அடைய முற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.   தமிழர்களின் அரசியல் பிரதிநிதியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையினால் கட்டியமைக்கப்பட்டது. அக்கட்சியில் உள்ளவர்கள் ஒருபோதும் அற்ப சலுகைக்காக அதாவது பணத்துக்காகவும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் சோரம்போனதில்லை. அவ்வாறு சோரம்போனவர்கள் மிகவும் அரிது.  

  • திருமலையில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

    ஆளுநர்களான எம். எல். ஏ. ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குமாறு கோரி நேற்று (03) திகதி திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. திருகோணமலை மக்கள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்த மூன்று பேரையும் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி…

  • ஐக்கிய இராச்சியத்தில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள்

    – MJ லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் தினமாக மத்திய லண்டன் பள்ளிவாயல் அறிவித்திருக்கிறது. காலை 9 மணியிலிருந்து தொழுகைக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிவாயல்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன. சனத்திரளைக் கருத்திற்கொண்டு மத்திய இலண்டன் பள்ளிவாயலில் மாத்திரம் 6 பெருநாள் தொழுகைகளும் குத்பாக்களும் காலை 7 மணியிலிருந்து நண்பகள் 12 மணிவரை இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

  • ஊடக மாநாடு

  • வஹாபிகளை வெறுத்த அஸாட் சாலிக்கும் இதுதான் நிலை..!

    இர்ஷாட் ஏ. காதர்YKK காத்தான்குடி: வஹாபிஸம் இலங்கையில் இருப்பதால்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் நிலைகொண்டுவருகிறது எனும் அடிப்படையில் கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக அந்நிய ஊடகங்களுக்கு சளைக்காமல் பேட்டிகொடுத்துவந்த முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அஸாட் சாலியின் நிலை இன்று கவலைக்கிடமாக இருப்பது ஆச்சரியமானதே!

  • மத்திய கிழக்கில் செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள்

    – MJ றியாத்: சவுதி அரேபியாவில் இன்று திங்கள் மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்து நாளை 4ம் திகதி செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் தினமாக சவுதி அரேபியா அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு இராச்சியம், குவைட் ஆகிய நாடுகளிலும் செவ்வாய்க்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகிறது.

  • அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை கையளித்தனர்

    ஆளுநர்களான  அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது. மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் அவசர கடிதம் !

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் அவசர கடிதமொன்றை எழுதியுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டடிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரின் கோரிக்கைக்கு குறித்த தீர்வினை வழங்குமாறு கோரியே அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அவசர கடிதங்களை எழுதியுள்ளனர்.

  • முடங்கியது கண்டியும் ஏனைய நகரங்களும்

    உண்ணாவிரதமிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கண்டியில் இன்று கடையடைப்பு இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கண்டியில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

  • ரிஷாத், அசாத்சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

    அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன் பதவி நீக்கி  குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையேல் கடும் எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் மீண்டும் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர் மீண்டும் தற்போது எச்சரித்துள்ளார். 

  • ஏனைய முஸ்லிம்கள் குறித்த தெளிவை ஜம்மிய்யதுல் உலமாவே வழங்க வேண்டும்!

    – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அங்கீகாரம் பெற்றுள்ள முஸ்லிம்களின் சமயத் தலைமை எனும் வகையில் இது அவர்கள் மீதுள்ள அதிகாரபூர்வமான வரலாற்று கடமையாகும்! ஆரவாரங்கள் விளம்பரங்கள் இன்றி அமைதியாகஎமது சன்மார்க்கக் கடமைகளை பணிகளைவழமைபோல் நாம் முன்னெடுப்போம், இன்ஷாஅல்லாஹ்!

←Previous Page
1 … 68 69 70 71 72 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar