Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மூஸா கண்ட சாமிரியும், முஸ்லிம் காங்கிரஸ் கண்ட ஹக்கீமும்

    மூஸாவின் அல்லாஹ்வைக் காண வேண்டும் என்பதற்காக பிர்அவ்ன் தன்னைத் தானே கடவுளாக்கிக் கொண்ட எகிப்தில் பிரமிட்டுக்களைக் கட்டினான். இறை கட்டளைப்படி அந்த அற்பன் மூஸாவைப் பின் தொடர கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.அல்ஹம்துலில்லாஹ் ஆணவம் அழிந்தது.

  • காத்தான்குடியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் சிப்லி பாறுக்

    காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச விளையாட்டு துறையினை மேம்படுத்த மோற்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் 2016.03.29ஆந்திகதி செவ்வாய்க்கிழமையன்று காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் அப்கர் அஹமத் தலைமையில் நடைபெற்றது,

  • டி 20 உலகக் கோப்பை: இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து தகுதி

    டில்லி: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. டில்லியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றனர். அணியின் சார்பாக அதிகபட்சமாக காலின் மன்ரோ அதிகபட்சமாக 46 ஓட்டங்களை எடுத்தார்.

  • மழை வேண்டி நடாத்தப்பட்ட தொழுகைகளும், கால நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களும் !

    ஷெய்க் மசிஹுதீன் இனாமுல்லாஹ் சில படிப்பினைகள்… “அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள். (ஸுரத் ரூம் 30:48)

  • கடத்தப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்த பெரும்பாலானோர் விடுவிப்பு

    கெய்ரோ: கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தில் இருந்த பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈஜிப்ட் ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அலெக்சாண்ட்ராவிலிருந்து புறப்பட்டு கெய்ரோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸிலுள்ள லார்னாகா விமானநிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

  • பெல்ஜியம்: பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுவிப்பு

    பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம்சாட்டப்பட்ட ஃபைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.ஃபைசல் சிக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானதாக இல்லையென அரசுத் தரப்புத் தெரிவித்திருக்கிறது.

  • சுகாதார முறைப்படி மாடறுப்பு தொழுவத்தினை பராமரிக்க மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் நடவடிக்கை

    காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட மாடறுப்பு தொழுவத்திற்கு 2016.03.29ஆந்திகதி இன்று அதிகாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் அதனுடைய நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

  • கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்து, வேல்ஸில் பல விமானங்கள் ரத்து

    லண்டன்: கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன.லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

  • கைதுக்கு தடை கோரி பசில் மனு; உச்ச நீதிமன்றம் மறுப்பு

    கொழும்பு: தன்னைக் கைது செய்வதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தது. இந்த வேண்டுகோள் முதலில் மாஜிஸ்ட்ரேட் நீதவான் முன் சமர்ப்பிக்கப் படவேண்டுமென்று கூறிய தலைமை நீதிபதி ஸ்ரீபவன் இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் முன்பாகக் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாதென்று தெரிவித்தார்.

  • ‘கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்’: அமீர் ஹுசைனின் கதை

    காஷ்மீர்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர்.

  • லாகூர் பூங்கா ஒன்றில் தற்கொலைத் தாக்குதலில் சிறார்கள் உட்பட் 60 பேர் பலி

    லாகூர்: பாகிஸ்தானில், லாகூர் நகரிலுள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள்.சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்த பூங்காவிற்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  • இஸ்லாமிய வங்கி முறைமைக்கு எதிராக கோஷமிடுவதை தடை செய்க

    கொழும்பு: நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறைமைகளுக்கு எதிராகவும், அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அமானா வங்கிக்கு எதிராகவும் இனவாத அமைப்புக்கள் கோஷமிடுவதை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

←Previous Page
1 … 234 235 236 237 238 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar