WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சோகத்தில் காத்தான்குடி

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் பேரபிமானம் பெற்ற இந்தியாவின் தமிழ்நாடு அதிராம்பட்டிணத்தப் பிறப்பிடமாகவும், காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் அதிபரும், இலங்கையில் பல நூறு உலமாக்களையும், ஹாபிழ்களையும் உருவாக்கியவரும், மூத்த உலமாவும், கொழும்பு சம்மாங்கோடு ஜாமிஉல் அழ்பர் ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளருமான சங்கைக்குரிய மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்’ எம்.ஏ. அப்துல்லாஹ் (றஹ்மானி) பெரிய ஹஸ்ரத் அவர்கள் நேற்று 12 புதன்கிழமை மாலை (வபாத்தானார்கள்) மரணமடைந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

  • அனுதாபத்துடன் நினைவுகூர்ந்து பிரார்த்திக்கின்றோம்

    உஸ்தாதுனா மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்மத் அப்துல்லாஹ் (றஹ்மானீ) அவர்கள் தென்னிந்தியாவின் தமிழ்நாடு – தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அதிராம் பட்டினத்தில் 21.03.1932இல் பிறந்தார்கள். இவர்களின் தந்தை அல்லாமா அல்ஹாஜ் அபூபக்கர் ஆலிம் ஆவார்கள். இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் இலங்கையின் அட்டாளைச்சேனையில் உள்ள கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்கள். இவர்களின் பாட்டனார் அல்லாமா ஷைகு அப்துல் காதிர் ஹஸ்ரத் அவர்களாவர்.

  • என் வாழ்வில் மறக்க முடியாத மகத்தான ஆசான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள்!

    1998ம் ஆண்டு நான் ஜாமிஅதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் அல்குர்ஆன் மனன பீடத்தில் சேர்ந்து, சுமார் மூன்று வருடத்திற்குள் அல்லாஹ்வின் வேதத்தை முழுமையாக மனனமிட்டு முடித்த பின் கிதாபுப் பிரிவிற்குள் காலடி எடுத்து வைத்தேன். கிதாபுப் பிரிவில் நான் முதலாம் வகுப்பில் மார்க்கக் கல்வி கற்கும் போது எனது குடும்பம் கடுமையான வறுமையில் இருந்தது.

  • காத்தான்குடியில் கடையடைப்பும் விஷேட குளிர்பானப்பந்தலும்

    காத்தான்குடி: மர்ஹும் ஷெய்குல் பலாஹ் மௌலவி MA. அப்துழ்ழாஹ் றஹ்மானி அவர்களுடைய ஜனாஸாவை நல்லடக்கம் செய்கின்ற இன்றையதினம் காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகளை பறக்க விடப்பட்டுள்ள அதேநேரம் பகல் வேளையில் காத்தான்குடி பிரதான வீதி, பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் விஷேட குளிர்பானப்பந்தலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் மகன் லண்டனில் காலமானார்

    லண்டன்: முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன் சென்றிருந்த நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

  • சம்மேளனம் விடுக்கும் அறிவித்தல்

  • பெரிய ஹஸ்ரத்

    அந்த நூர் நூர்ந்து போனதைப் பர்த்து நொந்து அழுகிறது மனசு. ஏனோ தெரியவில்லை. சஹாபாக்கள் பற்றி சரித்திரம் படிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அந்த புனிதர்களாய் இந்த முகமே என் மனதின் இமேஜ் கலறியில் வரும்.

  • காத்தான்குடி சம்மேளனத்தின் மாணவ ஒழுக்க விழுமிய மேம்பாட்டுக்குழு ஆரம்பம்

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தின் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி கோட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் ஒழுக்க விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்காலத்தில் முறையாக கையாளும் நோக்குடன் ஒழுக்க விழுமிய மேம்பாட்டுக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக (11.10.2016 செவ்வாய்) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது காத்தான்குடி சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய் ஏ.சீ.எம்.ஸபீல்(நழீமி) தெரிவித்தார்.

  • அப்துல்லாஹ் ஹஸரத் காலமானார்கள்

    காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் ஆயுட்காலத் தலைவர் அப்துல்லாஹ் ரஹ்மானி பெரிய கஸரத் அவர்கள் சற்று முன்னர் காலமானார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. விபரம் பின்னர் பதிவேற்றப்படும்.  

  • ‘தெஸ்ஸர’ பண்டிகையில் “அபாயி”கள்!

    ஹைதரபாத்: உலகிலுள்ள இந்துக்களின் ஓர் பிரிவினர் தெஸ்ஸர பண்டிகையினை தற்பொழுது அனுஷ்டிட்டு வருகின்றனர். இந்தியா, ஹைதரபாத்தில் இடம்பெற்ற தெஸ்ஸர பண்டிகைக்கான ஏற்பாடுகளில் கலந்துகொள்ளும் அபாயா அணிந்த இரு முஸ்லிம் நங்கையர்களையே (அபாயி) இங்கு காண்கிறீர்கள்.

  • ஜனாதிபதி மைத்திரியின் மகனும் இப்படியா..?

    கொழும்பு: கொழும்பிலுள்ள இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் துரித விசாரணையை நடாத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதியமைச்சர் கரு பரணவிதான தெரிவித்தார். இன்று (12) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியை அடுத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

  • “மைதானத்தில் சரியான முறையில் வீரர்கள் நடந்து கொள்வது அவசியம்”- பங்களாதேசுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை!

    மிர்பூர்: மிர்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

←Previous Page
1 … 162 163 164 165 166 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar