Category: Your Kattankudy
-
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்: சர்ச்சைக்குள் வட மாகாணசபை!
கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றியீட்டியிருந்தாலும் கூட்மைப்புக்குள் நிலவும் இழுபறி நிலையின் தொடராக தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நாட்டை விட்டு அவசரமாக வெளியேறி இந்தியா சென்றிருப்பதாக தெரியவருகின்றது.
-
பரீட்சையில் புள்ளி குறைந்தமையால் மகனை தீயினால் சுட்ட தந்தை
பொகவந்தலாவை: நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளியை பெற்ற தனது மகனை தீயினால் சுட்ட தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர் பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் மேல் மாகாண சபை தேர்தல்
கொழும்பு: அடுத்த தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஐ.ம.சு.மு. செயலாளர் நாயகம் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். மேல் மாகாண சபையின் பதவிக் காலம் 2014 ஏப்ரலில் நிறைவடைய உள்ளது.
-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குளங்களின் புனர் நிர்மாணிப்பு பணிகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குளங்களின் புனர் நிர்மாணிப்பு பணிகள் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் AHM. .தலைமையில் தம்பலகாம பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
-
திருகோணமலை மாவட்டத்தில் 37.மில்லியன் நிதியில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் எதிர் வரும் 12ம் திகதி பொது மக்களிடம் கையளிக்கப்படும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பும் நிர்மாணமும் கிரமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் யுத்த சூழ் நிலையாலும் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்ட நான்கு நீர் திட்டங்கள் 37.மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
-
ஒல்லிக்குளம் சமாதானக் கிராமம் ஆயிஷா பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா 2013
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஒல்லிக்குளம்: ஒல்லிக்குளம், சமாதானக் கிராமம் ஆயிஷா பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா 2013 வெகுவிமர்சையாக (04.10.2013) வெள்ளிக்கிழமை சமாதானக் கிராம முற்றவெளியில் நடைபெற்றது.
-
ஹஜ்ஜையும் அரபாவையும் தீர்மானிக்கும் துல்ஹஜ் பிறையை இலங்கையில் பார்க்கும்படி அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களை கோரியமை நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமானதாகும் -அகில இலங்கை உலமா கவுன்சில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஹஜ்ஜையும் அரபாவையும் தீர்மானிக்கும் துல்ஹஜ் பிறையை இலங்கையில் பார்க்கும்படி அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும், சிறிலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களை கோரியமை நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமானதாகும் என அகில இலங்கை உலமா கவுன்சில் தெரிவித்துள்ளது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தினை மேலோங்கச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக விசேட குழுக்கள் அமைப்பு
– FM. பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தினை மேலோங்கச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் வியாழக்கிழமை
-
‘இளம் வயதில் கருத்தரித்தலும் அதனால்; ஏற்படும் விளைவுகள்’ தொடர்பில் அறிவூட்டும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினர் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ‘இளம் வயதில் கருத்தரித்தலினால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று வியாழக்கிழமை
-
கா-குடி அஷ்-ஷூஹதா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் அதிபர் தரம் 1க்கு பதவி உயர்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி -2 ஆம் குறிச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் எம்.எம்.எம்.அப்துல் காதர் மற்றும் ஆமினா தம்பதிகளின் மகன் அல்ஹாஜ் எம்.ஏ.சி.எம்.பதுறுதீன் ஜேபி, அதிபர் தரம் 1க்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
-
புதிய தூதுவர்கள் தமது நியமனக்கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்
கொழும்பு: இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களும் உயர் ஸ்தானிகர்களும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துக்கொண்டார்.
-
புலமைபரிசில் பரீட்சையில் அதி சித்தி பெற்ற மாணவர்களை ஜனாதிபதி வாழ்த்தினார்
கொழும்பு: 2013 ஐந்தாந்தர புலமைபரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 198 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற காலி மஹிந்த கல்லூரி மாணவன் சந்தரு தத்சர பலஹேவா, கொடகம சுபாரதி வித்தியாலய மாணவி சவிந்யா கிம்ஹானி,