Category: Your Kattankudy
-
பாக்கிஸ்தான்-நியூசிலாந்து டெஸ்ட்: 1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் வீசாத நியுசிலாந்து பந்து வீச்சாளர்கள்!!
– AF-90 சார்ஜா: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.நியூசிலாந்து-பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார்.
-
இஸ்தான்புல்லின் பிரபல ‘ப்ளூ’ மஸ்ஜிதில் தலை வணங்கி பிரார்த்தித்த பாப்பரசர்
இஸ்தான்புல்: துருக்கியில் சுற்றுப்பயணம் செய்த போப் பிரான்சிஸ் இஸ்தான்புல் நகரில் உள்ள மஸ்ஜிதில் பிரார்த்தனை செய்தார்.போப் பிரான்சிஸ் துருக்கியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை அவர் இஸ்தான்புல் நகரில் இருக்கும் மிகப்பெரிய ப்ளூ மஸ்ஜிதுக்கு சென்றார். மஸ்ஜிதின் நுழைவாயிலில் அவர் தனது காலணிகளை கழற்றிவிட்டார்.
-
பிரதி அமைச்சராகின்றார் அமீர் அலி
– எம்.ரீ.எம்.பாரிஸ் மீராவோடை: நேற்று மாலை மீராவோடையில் அமைத்துள்ள அமீர் அலி கேட்போர் கூடத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இச்சந்திப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப துறை அமைச்சருமான றிஸாத் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி,கோறளைப்பற்று மேற்
-
“எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை”: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிவருகின்றது. இந்த பின்னணியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, அவரின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
-
“முஸ்லிம்கள் எதற்கும் அச்சம் அடையத் தேவையில்லை”: கோட்டாபய
பேருவளை: நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னாலிருந்து சதித்திட்டங்களை மேற்கொள்வதால் முஸ்லிம்கள் இவர்களின் தீயவலையில் சிக்காது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
அரசாங்கத்தின் தடைகளைத் தாண்டி இடம்பெற்ற மைத்திரியின் முதலாவது தேர்தல் கூட்டம்!
பொலன்னறுவை: பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. முன்னதாக இந்தக் கூட்டத்தை நடத்துமிடத்தில் பிக்குமார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூடாரத்தை நேற்று மாலை பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி அரசாங்கம் கழற்ற வைத்திருந்தது.
-
மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, NFGG காத்தான்குடி: இக்கட்டான தருணங்களில் கூட நமது மக்களுக்காக குரல் கொடுக்க திராணியில்லாத ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துக்களை முஸ்லிம் சமூகம் கணக்கெடுக்கப் போவதில்லை என பொறியியலாளர்அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
-
2014 தேசிய மீலாத் விழா ஆரம்பப் பிரிவு: காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவிகள் தேசிய மட்டத்தில் முதலிடம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2014 தேசிய மீலாத் விழா போட்டியில் ஆரம்பப் பிரிவு கலாசார நிகழ்ச்சி குழு ஹஸீதா போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாவது இடத்தை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய மாணவிகள் பெற்றுள்ளனர்.
-
காத்தான்குடி-அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 4 வது பாலர் கலை விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி (ISDA) இஸ்றா சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டுவரும் காத்தான்குடி அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 4 வது பாலர் கலை விழா 30-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொது பல சேனாவின் ஏஜென்டா?: கேள்வி எழுப்புகிறார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்
– ஊடகப்பிரிவு, NFGG பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொது பல சேனாவின் ஏஜென்டா? என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம்கள் வரிந்துகட்டிக்கொண்டு வாக்களிப்பதன்மூலம் பொது பல சேனாவிற்கு சாட்டையடி கொடுக்கவேண்டும்’ என்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கூற்று தொடர்பில் வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
-
பஹ்ரைனில் 11 வயது மாணவியை முத்தமிட்ட குற்றம்: இந்திய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை!
மனாமா: பஹ்ரைனில் 11 வயதான மாணவி ஒருவரை மானபங்கம் செய்த இந்திய ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடான பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா அருகே கிழக்கு ரபா நகர் உள்ளது. அங்குள்ள உணவு விடுதி ஒன்றுக்கு 11 வயது பள்ளி மாணவி ஒருவர் சென்றிருந்தார். அந்த உணவு விடுதியில் வேலை செய்து வந்த 31 வயது இந்திய ஊழியர் அந்த மாணவியை கன்னத்தில் முத்தமிட்டு மானபங்கம் செய்து விட்டார்.
-
இஸ்ரேல் கிரிக்கட் மத்தியஸ்தர் ஹிலல் தலையில் பந்துபட்டு மரணம்!
– AF- 90 ஜெருசலம்: இஸ்ரேலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மத்தியஸ்தராக இருந்த ஹிலல் ஒஸ்கர் தலையில் பந்து பட்டு மரணம் அடைந்துள்ளார். இஸ்ரேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹிலல் ஒஸ்கர் (55). இஸ்ரேலில் உள்ள துறைமுக நகரமான அஷ்தோதில் தேசிய லீக் சீசனின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.