Category: Your Kattankudy
-
மஹிந்தவுக்கு கட்-அவுட் வைப்பதை எதிர்த்தவரின் வீட்டில் தாக்குதல்!
திவுலப்பிட்டிய: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கட்-அவுட் ஒன்றை வைக்க அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்த ஒருவரது வீடு தாக்குதலுக்குள்ளானது. திவுலப்பிட்டிய , ,குடகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த துசித வீரசிங்க என்பவரின் வீட்டின் மீது நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக இரண்டு நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-
குவைத் நாட்டில் பணிபுரிய வாய்ப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்
கலீல் பாகவீ குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய உள்ள வாய்ப்பு குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய 50 வயதிற்குட்பட்ட குவைத் நாட்டின் கனரக மற்றும் இலகுரக வாகன நடப்பு ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் மற்றும் குவைத் ஒட்டுநர் உரிமத்தினை புதுப்பிக்கத் தவறிய ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள்.
-
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் NFGGயின் பிரச்சார நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது
NFGG ஊடகப்பிரிவு / பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (02.12.2014) மாலை கொழும்பில் இடம்பெற்றது.
-
அன்புள்ளங்கொண்ட எமது வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் காத்தான்குடி ரஸான்
காத்தான்குடி: சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னால், உங்கள் இணையத் தளத்தில் சுய தொழில் உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தேன். அதற்கு கிடைக்கப்பெற்ற உதவிகளை வைத்து, என்னை எப்படி வளர்த்துக் கொள்ள முடிந்தது என்ற விபரங்களை எனது ஆசான் மஸாஹிம் அவர்கள் மூலம் விபரித்து, புகைப்படம் மற்றும் வீடியோ இனைப்புடன் இத்துடன் அனுப்பியுள்ளேன். வாசகர்களின் பார்வைக்காக பிரசுரிக்கவும்.
-
“பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுக்க சந்திரிக்கா அனுமதிப்பதில்லை”
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் சில நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுக்க சந்திரிக்கா அனுமதிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
“பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும்”: ஐ.தே.க.
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் “பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும்” என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது.
-
அறிமுக போட்டியிலேயே ஹெட்ரிக்: பங்களாதேஷ் பந்துவீச்சாளர் உலக சாதனை!
டாக்கா: பங்களாதேஷ் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஹெட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஸிம்பாப்வே அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய தைஜூல் இஸ்லாம் ஹெட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
-
பக்தாதியின் மனைவி, மகன் லெபனானில் கைது
பெய்ரூட்: இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் மனைவி மற்றும் மகனை சிரிய எல்லையில் வைத்து கைது செய்ததாக லெபனான் பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர். பெயர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத இந்த இருவரும் 10 தினங்களுக்கு முன் லெபனானுக்குள் நுழைந்ததை அடுத்து இராணுவ உளவுப் பிரிவினரிடம் பிடிபட்டுள்ளனர்.
-
“மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்” : சரத் என் சில்வா
கொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக வெற்றியீட்டுவார் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். மைத்திரிபாலவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
-
“வென்றால் அலரி மாளிகைக்குச் செல்லமாட்டேன்” – மைத்திரிபால
கொழும்பு: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.