Category: Your Kattankudy
-
நேபாளத்தில் நிலநடுக்கம் : 100ற்கும் மேற்பட்டோர் பலி
காத்மண்டு: நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து சுமார் 50 மைல் தூரத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் அவர்கள் ஊடகத்துறை சார்ந்தோருக்கு பகிரங்கமாக எழுதியுள்ள கடிதமும், அதற்கான புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் பதிலும்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் சித்தீக் காரியப்பரின் கடிதம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பரிடமிருந்து, ஊடகத்துறை சார்ந்தோரின் கவனத்துக்கு! இந்த நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழக்கூடிய தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள், எழுத்தளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்குமான ஓர் அறிவித்தல்!
-
இலங்கையில் வளர்ந்து வரும் மக்தப் பாடத்திட்டம்
Ash-Sheikh Irshad Moomeen கொழும்பு: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் குர்ஆனை ஓதுவதற்கு கற்பிக்கும் ‘குர்ஆன் மத்ரஸாக்கள்’ தோற்றம்பெற்று விட்டன. இதனை மறுசீரமைக்கும் பணியை ‘அல்-மக்தப்’ செயற்றிட்டத்தின் ஊடாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டுள்ளது.
-
ஓட்டுத் தொழிற்சாலையினை மீள ஆரம்பிக்க அமைச்சர் றிசாத் பதியுதீன் நடவடிக்கை
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபாய்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
-
ராஜபக்ஸ குடும்ப சிரேஷ்ட 4 அரசியல்வாதிகள் சு.கட்சியிலிருந்து விரட்டியடிப்பு!
கொழும்பு: மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு எதிர்வரும் பொது தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ஆகியோருக்கே இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.
-
பாகிஸ்தானின் மனித உரிமை செயற்பாட்டாளர் சபீன் மெஹ்மூத் சுட்டுக் கொலை
கராச்சி: பாகிஸ்தானின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான சபீன் மெஹ்மூத் கராச்சி நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் வாகனத்தைச் செலுத்தியபடியே அவரைச் சுட்டுக் கொன்றனர். ஷபீன் மெஹ்மூத் தன் தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சுடப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் தாயாரும் காயமடைந்தார்.
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியிலிருந்த ரமாதி பாலத்தை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றியது
பக்தாத்: இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சுமார் ஒரு வருடமாக இருந்துவந்த ஈராக்கின் ரமாதி பாலத்தை ஈராக்கிய இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். இதன் புகைப்படத்தை இங்கே காணலாம்.
-
மைத்திரி – மஹிந்த இன்றைய சந்திப்பு ரத்து: மே மாதம் நடைபெறும்
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் இன்று (25) நடைபெற இருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில் இருவரும் சந்தித்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து பேச இருப்பதாக முன்னாள் அமைச்சர் குமாரவெல்கம எம்.பி. தெரிவித்தார்.
-
பழைய தேசியக் கொடியை பயன்படுத்தியமை தவறு தான்
கொழும்பு: சிறுபான்மையை குறிக்கும் நிறங்களற்ற பழைய தேசிய கொடியை ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தியது குறித்து மன்னிப்புக் கோருவதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழஹப் பெரும தெரிவித்தார்.இதனால் சிறுபான்மை யினருக்கு மனகஷ்டம் ஏற்பட்டிருந்தால் அது குறித்து வருந்துவதாக தெரிவித்த அவர் தவறுதலாகவே இந்தக் கொடி பயன் படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
-
கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவணையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் (24) வெள்ளிக்கிழமை கேலாகலமான இடம்பெற்றது.
-
உலகின் மகிழ்ச்சியான நாடு சுவிட்ஸர்லாந்து
லண்டன்: உலகின் மகிழ்ச்சிகரமான நாடு சுவிட்ஸர்லாந்து என கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் கீழ் சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வேர்க் மேற்கொண்ட உலக மகிழ்ச்சி தரவரிசைப் பட்டியலில் சுவிட்ஸர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.