-
விமான ஜன்னல்கள் கோள வடிவில் வடிவமைக்கப்படுவது ஏன்?
லண்டன்: விமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு அலாதியான உணர்வு ஏற்படும். ஆனால், அந்த ஜன்னல்கள் பொதுவாக பஸ், கார் உள்ளிட்டவற்றில் இருப்பது போன்று சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா?
-
சுற்றுலாப் பிரயாணிகளைப் பாதுகாக்க 20 சோதனைச் சாவடிகள்
கொழும்பு: சுற்றுலா மையங்களையும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாக்கும் வகையில் புதிய பொலிஸ் சோதனைச் சாவடிகளை அமைக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீது பாலியல் தாக்குதல் உட்பட சில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
-
திருகோணமலை ஹபாயா விவகாரம் சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் சந்திப்பு
– அகமட் எஸ். முகைடீன் திருகோணமலை: திருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது மத வறையறைக்குட்பட்ட ஆடையான ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு உயர்மட்ட குழு ஒன்றை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைத்து அக்குழுவினரை குறித்த விடயம் தொடர்பான அறிக்கையினை ஓரிரு தினங்களுக்குள் சமர்பிக்குமாறு பணித்துள்ளார்.
-
விமானத்தில் பிராணவாயு எங்கிருந்து கிடைக்கிறது
லண்டன்: விமானங்களின் கெபின் வெளிக்காற்று அழுத்தத்தால் பாதிக்கப்படாத வகையில் சிறந்த தடுப்பு அமைப்புடன் உருவாக்கப்படுகிறது. இதனால், உள்ளே இருப்பவர்களுக்கு தேவையான பிராண வாயு விசேஷ அமைப்பு மூலமாக எந்நேரமும் சப்ளை செய்யப்படுகிறது. பலரும் விமானத்திற்கு தேவையான பிராண வாயு வெளிப்புறத்திலிருந்து உறிஞ்சப்பட்டு, பின்னர் சுத்திகரிப்பு கருவிகள் உதவியுடன் விமானத்திற்குள் சப்ளை செய்யப்படுவதாக கருதுகின்றனர். விமானம் 35,000 அடி உயரம் வரை பறக்கின்றன.
-
104 நாடுகளுக்கு டி-20 கிரிக்கெட் சர்வதேச அந்தஸ்து அளிக்க ஐசிசி முடிவு
கொல்கத்தா: டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆடவர் அணிகளுக்கு, டி-20 அந்தஸ்து அளிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசியின் செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
காபூலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர, 119 பேர் காயமடைந்துள்ளனர்.
-
லண்டனில் மோடிக்கு எதிராக இந்தியர்கள் கோஷம்
லண்டன்: லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் கோ பேக் மோடி (திரும்பிப் போ மோடி) என்று கோஷமிட்டதுடன், பதாகைகளையும் ஏந்தி போராடினார்கள். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகவிட்டனர்.
-
சமூக வலைத்தளங்கள் எவ்வாறு திருட்டுவேலைகளைச் செய்கின்றன என்று தெரியுமா..?
லண்டன்: டேட்டா திருட்டு குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கும் பேஸ்புக் நிறுவனம், கிட்டத்தட்ட அதன் பொறுமையை இழந்து விட்டது என்றே கூறலாம். டேட்டா திருட்டு சார்ந்த விசாரணையின் போது, உங்களின் பிஸ்னஸ் மாடலை மாற்றிக்கொள்ள முடியமா அல்லது முடியாத.? என்கிற கேள்விக்கு, “இந்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் கூற முடியாது” என்று பேஸ்புக் நிறுவனத்தின் CEO ஆன மார்க் சுக்கர்பெர்க் கூறியதே, பேஸ்புக் நிறுவனம் அதன் பொறுமையை இழந்து விட்டதற்கான மிக சிறந்த ஆதாரம்.
-
காவத்தமுனை அல்-அஸார் விளையாட்டுக் கழகத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
– எம்.ரீ. ஹைதர் அலி காவத்தமுனை: கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எமது மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான பெறுபேறுகளை மாணவர்கள் எடுத்துள்ளனர். இதற்கு நேர்மாறாக க.பொ.த உயர்தர பரீட்சையில் குறைந்த பெறுபேறுகளையே எமது மாணவர்கள் பெற்றுள்ளனர் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
-
பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மீராவோடை அல்-அக்ரம் விளையாட்டுக் கழகத்திற்கு தளபாடங்கள் கையளிப்பு
எம்.ரீ. ஹைதர் அலி மீராவோடை: எமது பிரதேசங்களிலுள்ள அதிகமான விளையாட்டுக் கழகங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவதனை அவாதனிக்க முடிகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களை இணைத்துக்கொண்டு சமூக சேவைகளில் ஈடுபடும் கழகங்களாக தற்போது விளையாட்டுக் கழகங்கள் செயற்பட்டு வருகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
-
மீள் குடியேறியுள்ள ரொஹிங்யா குடும்பங்கள்
மியான்மர்: தற்போது ரொஹிங்யா முஸ்லிம் அகதிகள் மியான்மர் திரும்புவது பாதுகாப்பானது இல்லை என ஐ.நா எச்சரித்துள்ளபோதும், வங்கதேசத்தில் இருந்து திரும்பி வந்த முதல் ரொஹிங்யா அகதிகள் குடும்பம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் நடந்த வன்செயல்களால், சுமார் 7 லட்சம் ரொஹிங்யாக்கள் எல்லை தாண்டி தப்பிச் சென்றனர்.
-
சிரியாவைத் தாக்கும் அந்த 13 நாடுகள்
லண்டன்: சிரியாவில் நடக்கும் போரை பலர் ‘மினி உலகப் போர்’ அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள்.சிரியாவில் ஏழு ஆண்டுகளாக சண்டை தொடர்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் 20 நாடுகள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபட்டிருக்கின்றன. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த டூமா நகரில் ரசாயன தாக்குதல்கள் நடந்ததாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டபின், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் எதிர்த் தாக்குதல் தொடுத்தன.